பக்கம் எண் :

             காந்தியைக் காணலாம்


சிறுவன்


              
 காந்தியைப்போல் ஒருமகானைக்
                  
காட்டுவாய் அம்மா-அவர்
                கருணைபொங்கும் திருமுகத்தைக்
                  
காணுவேன் அம்மா.

                காந்தியைப்போல் ஒருமகானைக்
                  
காட்டுவாய் அம்மா-அவர்
                கனியைப் போன்ற இனிய சொல்லைக்
                  
கேட்பேனே அம்மா.

                சாந்தமூர்த்தி காந்தியைப்போல்
                  
காண முடியுமா?-அம்மா
                சத்தியத்தின் வடிவம்தன்னைக்
                  
காண முடியுமா?

 
117