பக்கம் எண் :

                       எனது ஊர்

 

                  என்றன் ஊரோ இராயவரம்;
                     
இனிமை மிக்க சிறுநகராம்.
                   மன்னர் ஆண்ட புதுக்கோட்டை
                      
மாவட் டத்தைச் சேர்ந்ததுவாம்.

                   தென்னை மரங்கள் இருபுறமும்
                      
தென்றல் வீசி வரவேற்கும்.
                   செந்நெல் விளையும் வயல்களுமே
                      
தெரியும் அந்த வழியெல்லாம்.

                   ஊரின் உள்ளே நுழைந்ததுமே
                     
 உள்ளம் கவரும் கோபுரங்கள்!
                   நேராய் உள்ள தெருக்களுடன்
                      
நிறைய மாட மாளிகைகள்!

                   ஊரின் நடுவே சிவன்கோயில்
                     
ஊருணி பலவும் அங்குண்டு.
                   மாரி யம்மன் திருக்கோயில்
                    
 மகிமை மிகவும் உடையதுவாம்.
                                   

 
122