கிட்டுவின் கீர்த்தி
பட்டம் ஒன்றைப் பெரியதாய்க்
கட்டி அதனின் நடுவிலே
கொட்டை எழுத்தில் என்பெயர்
பட்டை அடித்து எழுதினேன்.
வெட்ட வெளியில் நின்றுநான்
விட்டேன் நூலில் கட்டியே.
வெட்டி வெட்டி இழுக்கவே
பட்டம் மேலே சென்றதே !
எட்டி வானைத் தொட்டிடும்
இன்ப மான வேளையில்,
பட்டென் றந்த நூலுமே
நட்ட நடுவில் அறுந்ததே !
கட்ட விழ்ந்த காளைபோல்
காற்ற டித்த திசையிலே
பட்டம் பறந்து சென்றதே!
விட்டுத் திரும்ப முடியுமோ? |