பக்கம் எண் :

 கிட்டுவின் கீர்த்தி


                 
பட்டம் ஒன்றைப் பெரியதாய்க்
                   
 கட்டி அதனின் நடுவிலே
                  கொட்டை எழுத்தில் என்பெயர்
                    
பட்டை அடித்து எழுதினேன்.

                  வெட்ட வெளியில் நின்றுநான்
                    
விட்டேன் நூலில் கட்டியே.
                  வெட்டி வெட்டி இழுக்கவே
                    
பட்டம் மேலே சென்றதே !

                  எட்டி வானைத் தொட்டிடும்
                    
இன்ப மான வேளையில்,
                  பட்டென் றந்த நூலுமே
                    
நட்ட நடுவில் அறுந்ததே !

                  கட்ட விழ்ந்த காளைபோல்
                    
காற்ற டித்த திசையிலே
                  பட்டம் பறந்து சென்றதே!
                    
விட்டுத் திரும்ப முடியுமோ?

 
135