பக்கம் எண் :

 பல்லில்லாத பாட்டி


                 
பல்லில் லாத பாட்டிக்குப்
                    
பத்துப் பேரப் பிள்ளைகள்.
                  எல்லாப் பேரப் பிள்ளையும்
                    
எதிரே ஒருநாள் வந்தனர்.

                 “பத்துப் பத்துச் சீடைகள்
                    
பாட்டி உனக்கே” என்றனர்.
                  மொத்தம் நூறு சீடைகள்
                    
முன்னே வைத்துச் சென்றனர்.

                  ஏக்கத் தோடு பாட்டியும்
                    
எதிரே இருந்த சீடையைப்
                  பார்க்க வில்லை; சிரித்தனள்;
                    
பைய எழுந்து நின்றனள்.

                  சின்னத் தூக்கு ஒன்றிலே
                    
சீடை யாவும் வைத்தனள்.
                  என்ன செய்தாள், தெரியுமா?
                     
எடுத்துச் சொல்வேன், கேளுங்கள்;

 
149