பக்கம் எண் :

தங்கமும் சிங்கமும்
 

             எங்கள் வீட்டுப் பூனை அம்மா
                
இரண்டு பிள்ளை பெற்றாள்.
                 இரண்டு பிள்ளை பெற்றாள்-அவள்
                 என்ன பேரு வைத்தாள் ?


           
 தங்கம் என்றோர் பிள்ளை பெயராம்.
                
தவிட்டு நிறத்துப் பிள்ளை.
                 தவிட்டு நிறத்துப் பிள்ளை-அது
                 தப்பே செய்வ தில்லை.


            
சிங்கம் என்றோர் பிள்ளை பெயராம்.
                
தீரம் உடைய பிள்ளை.
                 தீரம் உடைய பிள்ளை-அது
                 தீங்கே செய்வ தில்லை.

            
தங்கம், சிங்கம் இரண்டும் அந்தத்
                
தாய்க்கு நல்ல பிள்ளை.
                 தாய்க்கு நல்ல பிள்ளை - இதில்
                 சற்றும் ஐயம் இல்லை !

 

 
30