பக்கம் எண் :

தூங்கும் விதம்

  

                     ஒட்டைச் சிவிங்கி நின்று கொண்டே
                         நன்கு தூங்கிடும்.
                     உயரே வௌவால் தலைகீ ழாகத்
                         தொங்கித் தூங்கிடும்.


                    
சிட்டுக் குருவி மரத்தின் கிளையைப்
                         பற்றித் தூங்கிடும்.
                     சின்னப் பாப்பா தொட்டி லுக்குள்
                         படுத்துத் தூங்கிடும்.


                   
 கண்ணை மூடி நாமெல் லாரும்
                         நன்கு தூங்குவோம்.
                     கண்ணைத் திறந்த படியே மீனும்
                         பாம்பும் தூங்கிடும்.


                    
என்ன கார ணத்தி னாலே
                         என்று தெரியுமா ?
                     இவைக ளுக்குக் கண் ணைமூட
                         இமைகள் இல்லையே !

 
48