ஒரு வரம்
இறைவா, எனக்கொரு வரம்தருவாய். இனியதை நினைக்க அருள்புரிவாய். இறைவா, எனக்கொரு வரத்தருவாய். இனியதைப் பேச அருள்புரிவாய். இறைவா, எனக்கொரு வரம்தருவாய். இனியதைச் செய்ய அருள்புரிவாய்.
எண்ணம், வாக்கு, செய்கையிலே
இனிமை இருந்தால் வாழ்க்கையிலே,
இன்பம், இன்பம், இன்பம்தான்.
இல்லா விட்டால் துன்பம்தான் !