பக்கம் எண் :

குரங்குக் குடும்பம்
(மாமல்லபுரச் சிற்பம்)


                  
அப்பாக் குரங்கு பின்புறத்தில்
                     
அமர்ந்தி ருக்குது;
                   அம்மாக் குரங்கின் தலையி லிருந்து
                     
பேன் எடுக்குது.

                   பிள்ளைக் குரங்கு அம்மா மடியில்
                     
படுத்தி ருக்குது.
                   பிரிய மாக அம்மா அதற்குப்
                     
பால் கொடுக்குது.

                   அன்பு, பாசம், கடமை யெல்லாம்
                    
 கல்லில் காட்டிடும்
                   அற்பு தத்தைச் செய்த சிற்பி
                     அவரைத் தெரியுமோ?

                   இன்று அவரைத் தெரிய வி்ல்லை
                     
என்ற போதிலும்,
                   இந்தக் காட்சி நமது நெஞ்சில்
                     
என்றும் நிற்குமே !
                                                                      

 
83