கந்தன் சொல்கிறான்
ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.
சூறைக் காற்றில் பறக்கும் அது.
சிறுமழை பெய்யினும் ஒழுகும் அது.
யாரும் உள்ளே நுழைந்திடலாம்.
இழுத்துச் சாத்திடக் கதவில்லை.
ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.
அருகில் எந்தத் தெருவுமில்லை.
அந்திபட் டாலோ விளக்குமில்லை.
சிறுஅகல் விளக்கில் படித்திடுவேன்.
தேர்வில் நிச்சயம் வென்றிடுவேன். |