பக்கம் எண் :

கந்தன் சொல்கிறான்


                
ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
                 ஓலைக் குடிசை என்குடிசை.

                     சூறைக் காற்றில் பறக்கும் அது.
                    
   சிறுமழை பெய்யினும் ஒழுகும் அது.
                     யாரும் உள்ளே நுழைந்திடலாம்.
                       
இழுத்துச் சாத்திடக் கதவில்லை.

                 ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
                 ஓலைக் குடிசை என்குடிசை.

                     அருகில் எந்தத் தெருவுமில்லை.
                   
    அந்திபட் டாலோ விளக்குமில்லை.
                     சிறுஅகல் விளக்கில் படித்திடுவேன்.
                   
    தேர்வில் நிச்சயம் வென்றிடுவேன்.

 
85