கூடப் பிறந்தவர்
கோடி கோடி பேர்கள் என்றன் கூடப் பிறந்தவர். குமரி முதலாய் இமயம் வரையில் வாழ்ந்து வருபவர். ஓடி ஓடி உழைத்து நாட்டை உயரச் செய்பவர். உரிமை, கடமை இரண்டும் இரண்டு கண்கள் என்பவர்.