| நுதலிடைக் கிடந்து நுடங்கும்அக் காட்சி கவிஞன் ஓவியன் கற்பனை தூண்டும், நடைக்கோர் உவமை நவிலவும் ஒல்லுமோ? | |
| | |
| உலுத்தர் தொல்லை | |
| | |
| கடைத்தெரு வழியே காரிகை தனியாய் | |
| ஏகின் சிற்றினம் ஏதம் விளைக்கும்; நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் | 50 |
| மக்கட் பண்பு மங்குதல் கண்டோம் தெக்கணம் இப்படித் தேய்வது நன்றோ? | 55 |
| | |
| அல்லியின் வரலாறு | |
| | |
| வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர் எனும்பேர் மருவிய நகருள் | |
| கோசிகப் பேரினன் குலக்கொடி யாவேன்; மாசி மாமகத் தண்புனல் ஆடும் ஆசை துரப்ப ஆணை கோரினேன்; தந்தை தடுத்தும் தவிரரும் ஆர்வம் உந்த அவருரை உதறித் தனிமை | 60 |
| அஞ்சிலேன் ஆய்விலா நெஞ்சினேன் சென்றேன்; ஒருமகள் ஆதலின் உருத்துத் தடுக்கா திருந்தனர், ஆங்கோர் இடுக்கண் நேர்ந்தது; | 65 |
--------------------------------------------------------------- |
| நுதல் - நெற்றி, நுடங்கும் - அசையும், நவில - சொல்ல, சிற்றினம்- கயவர்கூட்டம், ஏதம் - துன்பம், நாகு - இளமை, உறுதுணை - ஏற்றதுணை, ஊறு - துன்பம், உலுத்தர் - கயவர். பல்கினர் - பெருகினர், களமர் - உழவர், துரப்ப - செலுத்த, உருத்து - சினந்து, இடுக்கண் - துன்பம்,. | |
| | |