| | ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற் |
| 90. | பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும், கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும் ; அலமுகந் தாக்குழி யலமரு மாமை |
| 95. | நுளைச்சியர் கணவரோ டிழைத்திடு மூடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும் ; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடு மன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா ; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில், |
| 100. | உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர் இப்பெருந் யேத் தெங்கு மிராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா. கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி |
| 105. | வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல். நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும் எய்யா தென்று மெதிர்த்திடும் பிணக்கில் நடுக்கட னன்னீர் சுவைத்திடு மொருகால் ; மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால் ; |
| 110. | வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் ஓமென வோவிறந் தொலிக்கப் பிரணவ நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார், நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும் படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித் |
| 115. | தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா, நிலவொளி முத்துங் கவடியும் பணமா, அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண, துகிர்க்கா லன்னமும் புகர்க்காற் கொக்குஞ் செங்கட் போத்துங் கம்புட் கோழியுங் |
| 120. | கனைகுர னாரையுஞ் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளு முள்ளான் குருகும் என்றிவை பலவு மெண்ணில குழீஇச் |