பக்கம் எண் :

மனோன்மணீயம்
90

60.அடுத்திடி லும்மையும் பிடிக்குமிம் மாயை.
பிடித்திடிற் பின்நும் படிப்பும் ஞானமுங்
குருட்டா சனுக்குக் கொளுத்திய விளக்கும்
இருட்டறை யிருந்துகண் சிமிட்டலு மென்ன
ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்?

65.பார்க்கப் பார்க்கஇப் படியே துயரம்
மீக்கொளும். அதனால் விடுமுல கெண்ணம்.
சுட்டதோர் சட்டிகை விட்டிட லென்னத்
துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ !
மறக்கிற் சுயமே மறையும். மறைய

70.இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே
பிறக்கும் பிரத்தியக் பிரபோ தோதயம் !
நீரு முலகமும் நிகழ்த்திய போரும்
யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய்
எதிரது கழிந்தபே ரின்பமே திகழும் !

75.உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான்
உரைதரல், பிறவிக் குருடற் கொருவன்
பால்நிறங் கொக்குப் போலெனப் பகர்ந்த
கதையாய் முடியும் ! அதனாற் சற்றே
பதையா திருந்துநீர் பாருஞ்

80.சுதமா மிவ்வநு பூதியின் சுகமே.

1


கருணாகரர்.சுகம்யான் வேண்டிலேன் சுவாமி ! எனக்குமற்று
இகம்பர மிரண்டு மிலையெனி லேகுக.
யானென வொருபொரு ளுளதா மளவும்,
ஞான தயாநிதி நங்குரு நாதன்

1


85.ஈனனா மென்னையு மிழுத்துஅடி சேர்த்த
வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால்
ஆனதோர் சிறுபணி யாற்றலே யெனக்கு
மோனநற் சித்தியும் முத்தியும் யாவும்.
ஐயோ ! உலகெலாம், பொய்ய யினுமென் !

90.பொய்யோ பாரும் ! புரையறு குரவன்
பரிந்துநந் தமக்கே சுரந்தவிக் கருணை !
இப்பெருந் தன்மைமுன் னிங்குஉமக் கேது?