| மனோன், | | எந்தைபோல் தயாநிதி யெங்கணு மில்லை. வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே! |
| 85. | ஏதோ வொருவித மெழுதினே னென்க! வாணி! உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ வதற்குள கட்டளை. | | | (திருமுகங்காட்ட : வாணிவாசிக்க) |
| | சொன்னேன் அன்றே வாணீ! முன்னமே அன்னை தந்தைய ரன்பறி யார்சிறார். |
| வாணி, | 90. | இத்தரு ணத்தி லிதுவென்? அம்மணி! சத்தியம். எனக்கிது சம்மத மன்று. நினைப்பருந் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலா முறுங்காற் காண்குவம். |
| மனோன், | 95. | என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி யென்மனப் படியே. வந்தவிச் சுரத்திடை மாண்டதென் சித்தம். |
| வாணி, | | ஆயினு மம்மா! யாரிஃதறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியுங் கொடிய |
| 100. | வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙன மிசைந்தனை யென்க. என்னையுன் நினைவோ! என்னையுன் துணிபோ! இன்னன மகிழ்ச்சியி லென்மண மேகுறை! (அழ) |
| மனோன், | 105. | வருந்தலை வாணி! வா வா. இன்னுந் தெரிந்தலை. ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையா னுரைத்தேன். உணருதி. உறுதி. என்மன மாரவே யிசைந்தேன். மெயம்மை. ஏதென எண்ணினை யிவ்வுயிர் வாழ்க்கை? |
| 110. | தீதற வின்பந் துய்ப்பநீ யெண்ணில் ஈதல வதற்கா முலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறு மெனிலிவ் யாக்கையி லமையுமோ நீக்கமி லின்பம். எனக்கெனக் கென்றெழு மிச்சையா திகளெனும் |
|
|
|