பக்கம் எண் :

மனோன்மணீயம்
14

முதல் அங்கம்

3-ம் களம்

இடம் : கொலுமண்டபம். காலம் : காலை.

சீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)


ஜீவகன்.நமக்கத னாலென்? நன்றே யாமெனத்
தமக்குச் சரியா மிடத்திற் றங்குக.
எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்?
ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிக்க
5.கேவல மாக்கினர். அதற்குள கேடென்?
குறைவென்? குடில? கூறாய் குறித்தே.
குடிலன்,குறையா னொன்றுங் கண்டிலன். கொற்றவ !
நறையார் வேப்பந் தாராய் ! நமதிடங்
கூட லன்றெனுங் குறையொன் றுளது.
10.நாடி லஃதலா னானொன் றறியேன்.
மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர்
ஆலய மொன்றையே யறிவர். முன்னொரு
கோவி லமைத்ததிற் குறைவிலா வுற்சவம்
ஓவ விலாதே யுஞற்றுமி னென்றவர்
15.ஏவினர். அஃதொழித் தியற்றின மிப்புரி.
ஆதலா லிங்ஙன மோதினர். அதனை
அழுக்கா றென்றுநா மையமற் றறைதல்
ஒழுக்க மன்றே, குருவன் றோவவர்?
ஜீவ.ஐயரு மழுக்கா றடைந்தார், மெய்ம்மை.
20.கோவில் தானா காவலர் கடமை?
கேவலம் ! கேவலம் ! முனிவரும் ! ஆ ! ஆ !
குடில,அதிசய மன்றுபூ பதியே ! இதுவும்.
துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர்.
மறந்தார் சிற்சில, வறிதே தமக்கு