பக்கம் எண் :

கணவன் அதிகாரம்13

Untitled Document

என்று நான் விரும்பினேன். அப்படி     அவள்   ஆசை வைக்காது
போனாலும் வாழ்க்கை மீளாத்      துன்பமாக இருந்திருக்க முடியாது.
ஏனெனில், ஒரு          பக்கத்திலாவது தீவிரமான அன்பு இருந்தது.

     அவளிடம் எனக்கு அடங்காப்        பிரேமை என்பதை நான்
சொல்லவே  வேண்டும்.    பள்ளிக்கூடத்தில்கூட   எனக்கு   அவள்
நினைப்புத்தான். இரவானதும் அவளைச்  சந்திக்கலாம் என்ற எண்ணம்
எப்பொழுதும் மனத்தில் தோன்றிக் கொண்டே இருக்கும். பிரிந்திருப்பது
என்பதோ சகிக்க முடியாததாகும். இரவில்     நெடுநேரம்   வரையில்
ஏதேதோவெல்லாம் பேசி, அவளைத்   தூங்கவிடமாட்டேன். இத்தகைய
அடங்காத காமவெறிக்கு மாற்றாகக் கடமையில் தீவிரமான  பற்றுமட்டும்
எனக்கில்லாதிருந்தால், நான்     நோய்வாய்ப்பட்டு அகால மரணத்தை
அடைந்திருப்பேன்; இல்லையானால், பிறருக்குப்  பாரமாக இருந்து வாழ
வேண்டியவனாகியிருப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும்   காலையில்
எனக்கென்றிருந்த வேலைகளை நான்     செய்து தீரவேண்டியிருந்தது.
யாரிடமும் பொய் சொல்லுவது  என்பதோ என்னால் ஆகவே ஆகாது.
கடைசியாகச் சொன்ன இந்தக் குணமே      படுகுழியில் விழாமல் பல
தடவைகளிலும் என்னைக் காத்தது.

     கஸ்தூரிபாய் எழுத்து வாசனை இல்லாதவள் என்பதை  முன்பே
கூறியிருக்கிறேன். அவளுக்குக் கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்று
நான் மிகவும் ஆவலோடு   இருந்தேன். ஆனால், காமமே மேலோங்கி
நிற்கும் காதலினால் அதற்கு நேரமே இல்லாது போயிற்று. அவளுக்குப்
படிப்புச் சொல்லிக்   கொடுப்பதனால்,     அவளுடைய இஷ்டத்திற்கு
மாறாக, அதுவும்    இரவில்தான் சொல்லிக்       கொடுக்க முடியும்.
பெரியவர்கள்   இருக்கும்போது   அவளைச் சந்திப்பதற்கே எனக்குத்
துணிவு இல்லையென்றால், அவளுடன் பேசுவது எப்படி? கத்தியவாரில்
அப்பொழுது ஒரு    விசித்திரமான,     உபயோகமற்ற,      காட்டு
மிராண்டித்தனமான பர்தா முறை      ( கோஷா முறை )   இருந்தது;
இப்பொழுதும்கூட அது ஓரளவுக்கு      இருந்து வருகிறது. இவ்விதம்
சந்தர்ப்பங்கள்      சாதகமானவையாக இல்லை. ஆகையால் வாலிபப்
பருவத்தில்          கஸ்தூரி பாய்க்குக் கல்வி கற்பிக்க நான் செய்த
முயற்சிகளெல்லாம்      வெற்றி பெறவில்லை என்பதை நான் ஒப்புக்
கொண்டே       ஆகவேண்டும்.    காமத் தூக்கத்திலிருந்து   நான்
விழித்தெழுவதற்கு முன்பே பொது வாழ்க்கையில்   இறங்கி விட்டேன்.
ஆகையால், எனக்குப் போதிய ஓய்வு நேரம் இல்லாமல் போய்விட்டது.
தனிப்பட்ட    உபாத்தியாயர்களைக்   கொண்டு       போதிக்கவும்
தவறிவிட்டேன். இதன் பயனாக, இன்று     கஸ்தூரிபாய் சிரமத்தின்
பேரில் சாதாரணக் கடிதங்களை எழுதிக்