பக்கம் எண் :

200சத்திய சோதனை

Untitled Document
புறப்பட்டேன்.

     கப்பலில்   பிரயாணிகள் குறைவாகவே இருந்தனர். அவர்களில்
இருவர் ஆங்கில அதிகாரிகள். அவர்களுடன்    எனக்கு நெருங்கிய
பழக்கம் உண்டாயிற்று. அவர்களில்     ஒருவருடன் தினம் ஒரு மணி
நேரம் சதுரங்கம் விளையாடுவேன். கப்பல் டாக்டர் எனக்கு,  ‘தமிழ்ச்
சுயபோதினி’     என்ற  புத்தகத்தைக் கொடுத்தார்.  அதைப் படிக்க
ஆரம்பித்தேன். முஸ்லீம்களுடன்      நெருங்கிய தொடர்பு வைத்துக்
கொள்ள வேண்டுமாயின்,   உருது மொழி தெரிந்திருப்பதும் சென்னை
இந்தியருடன்     நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்குத்
தமிழ்    தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம் என்பதை நேட்டால்
அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

     அந்த ஆங்கில நண்பரும்   என்னுடன் உருது படித்தார். அவர்
கேட்டுக்          கொண்டதன்       பேரில்,  மூன்றாம் வகுப்புப்
பிரயாணிகளிடையே ஒரு நல்ல உருது முன்ஷியைக் கண்டுபிடித்தேன்.
எங்களுடைய இப்படிப்பில் நல்ல   முன்னேற்றமும் கண்டோம். அந்த
அதிகாரிக்கு    என்னை விட ஞாபக சக்தி அதிகம். ஒரு சொல்லைப்
பார்த்து    விட்டால் பிறகு அதை அவர் மறக்கவே மாட்டார். உருது
எழுத்துக்களை    நினைவில் வைத்திருப்பது     எனக்குச் சிரமமாக
இருந்தது. அதிக விடா முயற்சியுடனேயே நான்  படித்தேன். ஆனால்,
அந்த அதிகாரியை மிஞ்சிவிட முடியவே இல்லை.

     தமிழிலோ, நல்ல     அபிவிருத்தி அடைந்து வந்தேன். இதைச்
சொல்லிக் கொடுக்க       யார் உதவியும் கிடைக்கவில்லை. ஆனால்,
‘தமிழ்ச் சுயபோதினி’  நன்றாக எழுதப்பட்ட புத்தகம்.  இன்னொருவர்
உதவி அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

     இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்த பிறகும்,    இம் மொழிகளைத்
தொடர்ந்து       படிக்கலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால், அது
சாத்தியமில்லாது    போயிற்று.   1893-க்குப் பிறகு நான் அதிகமாகப்
படித்ததெல்லாம் சிறையிலேதான். சிறைகளில்,  தமிழிலும் உருதுவிலும்
எனக்குக்     கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கச்
சிறைகளில்   தமிழ் படித்தேன்;  உருது படித்தது எராவ்டா சிறையில்.
ஆனால், தமிழ்     பேசக் கற்றுக்கொள்ளவே இல்லை.  நான் படித்த
கொஞ்சம்         தமிழும்,    பயிற்சி இன்மையால் துருப் பிடித்துக்
கொண்டிருந்தது.

     தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை இன்னமும் நான் உணர்ந்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருந்த
திராவிடர்கள் என்மீது பொழிந்த அன்பு, இன்றும் எண்ணிப் போற்றுவதற்கு உரிய நினைவாக இருந்து வருகிறது. தமிழ் அல்லது தெலுங்கு நண்பர்