பக்கம் எண் :

ஆசியாவிலிருந்து வந்த எதேச்சாதிகாரிகள்307

Untitled Document
விசாரித்தார்கள். ஆனால், அவர்களாலும் நிச்சயமாக எதுவும் சொல்ல
முடியவில்லை. எனக்குள்ள   பழைய தொடர்பை வைத்துக் கொண்டு
அனுமதிச் சீட்டு இல்லாமலேயே      நான் நுழைந்திருக்க வேண்டும்
என்று         ஊகித்துக்கொண்டுவிடவே அதிகாரிகள் முற்பட்டனர்.
அப்படித்தான் என்றால், நான்         கைது செய்யப்பட வேண்டிய
குற்றத்தைச் செய்தவனாவேன்!

     ஒரு பெரிய                 யுத்தம் முடிந்ததுமே, அப்போது
அதிகாரத்திலிருக்கும்      அரசாங்கத்திற்கு விசேட அதிகாரங்களைக்
கொடுப்பது பொதுவான வழக்கம்.    தென்னாப்பிரிக்கா விஷயத்திலும்
அதுவே நடந்தது. சமாதானப் பாதுகாப்பு    அவசரச் சட்டம் ஒன்றை
அரசாங்கம் நிறைவேற்றியது.         அதன்படி, அனுமதி இல்லாமல்
டிரான்ஸ்வாலுக்குள் வரும் யாரையும் கைது செய்து சிறைத் தண்டனை
விதிக்கலாம். அச்சட்டத்தின்     இந்த விதியின் கீழ் என்னைக் கைது
செய்யலாமா என்று  அதிகாரிகள் யோசித்தார்கள். ஆனால், அனுமதிச்
சீட்டைக் காட்டும்படி        என்னைக் கேட்கும் தைரியம் யாருக்கும்
வரவில்லை. எனினும், அதிகாரிகள்      டர்பனுக்குத் தந்தி கொடுத்து
விசாரித்தார்கள். அனுமதிச் சீட்டின் பேரிலேயே நான் வந்திருக்கிறேன்
என்று அறிந்ததும் ஏமாற்றமடைந்தனர். ஆனால்,         இத்தகைய
ஏமாற்றங்களினால்      தோல்வியடைந்து விடக் கூடியவர்கள் அல்ல
அவர்கள்.                டிரான்ஸ்வாலுக்குள் வந்துவிடுவதில் நான்
வெற்றிபெற்றுவிட்டாலும்     ஸ்ரீ  சேம்பர் லேனிடம் நான் தூதுபோக
முடியாதபடி அவர்கள்  என்னை வெற்றிகரமாகத் தடுத்துவிட முடியும்.

     ஆகவே, தூதுசெல்லப்போகும்       பிரதிநிதிகளின் பெயரைச்
சமர்ப்பிக்குமாறு சமூகத்தினரைக் கேட்டார்கள்.  தென்னாப்பிரிக்காவில்
எங்குமே நிறவெறி இருந்து      வருகிறது என்பதை நான் அறிவேன்.
ஆனால், இந்தியாவில்         நான் கண்ட இழிவான தந்திரங்களும்,
கீழ்த்தரமான உபாயங்களும் இங்கும் அதிகாரிகளிடம் இருக்கும் என்று
நான் எதிர் பார்க்கவே இல்லை.        தென்னாப்பிரிக்காவில் பொது
இலாக்காக்கள் மக்களின் நன்மைக்கு       என்றே இருந்தன. அவை
பொதுஜன    அபிப்பிராயத்திற்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை.
ஆகையால் அதிகாரிகள்         மரியாதையுடனும், அடக்கத்தோடும்
நடந்துகொள்ளுவார்கள். இதனால்,     வெள்ளையர் அல்லாதாருக்கும்
ஓரளவுக்கு நன்மை இருந்துவந்தது.    ஆசியாவிலிருந்து அதிகாரிகள்
வந்து சேர்ந்ததும், அவர்களுடன்        எதேச்சாதிகாரமும், அங்கே
எதேச்சாதிகாரர்கள் பெற்றிருந்த பழக்கங்களும் கூடவே வந்துவிட்டன.
தென்னாப்பிரிக்காவில் ஒரு வகையான   பொறுப்பாட்சி அல்லது ஜன
நாயகம் இருந்தது. ஆனால், ஆசியாவிலிருந்து இறக்குமதியான இந்தச்
சரக்குகளோ, கலப்பற்ற      எதேச்சாதிகார மயமானவை. ஏனெனில்,