பக்கம் எண் :

352சத்திய சோதனை

Untitled Document
கிடைத்தார்.       காலஞ்சென்ற பூஜ்யர் ஜோஸப் டோக்கின் நட்பு
ஏற்பட்டதற்கும் அதுவே ஓரளவுக்குப் பொறுப்பாயிற்று.

     ஒரு சைவ உணவு விடுதியில்     நான் சாப்பிடுவது வழக்கம்
என்று முந்திய அத்தியாயம்  ஒன்றில் சொல்லியிருக்கிறேன். அங்கே
தான் ஸ்ரீ ஆல்பர்ட் வெஸ்ட்டைச்     சந்தித்தேன். ஒவ்வொரு நாள்
மாலையில் இந்த விடுதியில்     நாங்கள் சந்தித்துச் சாப்பிட்ட பிறகு
உலாவப் போவது வழக்கம். ஒரு சிறு அச்சகத்தில்     ஸ்ரீ வெஸ்ட்
கூட்டாளி. பிளேக் நோய் ஏற்பட்டதைக் குறித்து நான்  எழுதியிருந்த
கடிதத்தை         அவர் பத்திரிகையில் படித்தார். என்னை அந்த
விடுதியில் காணாது      போகவே அவருக்குக் கவலையாகிவிட்டது.

     தொத்து நோய் ஏற்படும்          காலங்களில் சாப்பாட்டைக்
குறைத்துக்கொண்டுவிடுவது என்பதை     நீண்ட காலமாகவே நான்
வழக்கமாகக் கொண்டிருந்தேன். பிளேக்  நோய் ஏற்பட்டதும் நானும்
என் சக ஊழியர்களும்          எங்கள் சாப்பாட்டைக் குறைத்துக்
கொண்டுவிட்டோம். ஆகையால்,        இந்த நாட்களில் மாலையில்
சாப்பிடுவதை   விட்டுவிட்டேன். மத்தியானச் சாப்பாட்டைக்கூட மற்ற
விருந்தினர் வருவதற்கு முன்னால் சாப்பிடுவேன்.  அந்தச் சாப்பாட்டு
விடுதியின் சொந்தக் காரரை    எனக்கு நன்றாகத் தெரியும். பிளேக்
நோயாளிகளுக்குப்          பணிவிடை செய்யும் வேலையில் நான்
ஈடுபட்டிருப்பதால்           சாத்தியமான வரையில் நண்பர்களைச்
சந்திப்பதைத்      தவிர்த்துக்கொள்வது என்று இருக்கிறேன். என்று
அவரிடம் தெரிவித்திருந்தேன்.

     சாப்பாட்டு விடுதியில்        இரண்டொரு நாட்கள் என்னைக்
காணாது போகவே ஸ்ரீ வெஸ்ட், ஒரு நாள் காலையில் என் வீட்டிற்கு
வந்தார்.            உலாவப் போவதற்கு   அப்பொழுதுதான் நான்
தயாராகிக்கொண்டிருந்தேன். நான்  கதவைத் திறந்ததும் ஸ்ரீ வெஸ்ட்
கூறியதாவது: “உங்களைச்      சாப்பாட்டு விடுதியில் காணவில்லை.
எனவே,     உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதோ என்று பயந்து
விட்டேன். ஆகையால், உங்களை வீட்டிலாவது  போய்ப் பார்ப்போம்
என்பதற்காகக் காலையில் புறப்பட்டு   வந்தேன். இப்பொழுது நீங்கள்
சொல்லும்          பணியைச் செய்ய நான் சித்தமாக இருக்கிறேன்.
நோயாளிகளுக்குப்          பணிவிடை செய்வதில் உதவி செய்யத்
தயாராயிருக்கிறேன். என்னால்      பராமரிக்கப்பட வேண்டியவர்கள்
யாருமில்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.”

     என்னுடைய நன்றியை அவருக்குத்  தெரிவித்துக் கொண்டேன்.
ஒரு விநாடிகூடச் சிந்திக்காமல்     பின்வருமாறு பதில் சொன்னேன்:
“உங்களை நோயாளிகளுக்குப்    பணிவிடை செய்ய நான் எடுத்துக்
கொள்ளப்போவதில்லை. மேற்கொண்டும் புதிய நோயாளிகள் இல்லை
என்றால், இரண்டொரு நாளில்          எங்களுக்கே வேலையிராது