பக்கம் எண் :

488சத்திய சோதனை

Untitled Document
கொஞ்சம் முன்னால்தான் அவர் அந்த உத்தியோகத்தை ராஜினாமாச்
செய்து விட்டார். நான் அங்கே வருவது குறித்து  அவருக்குத் தந்தி
மூலம் அறிவித்திருந்தேன். ரெயில்,             நடுநிசியில் அங்கு
போனபோதிலும் ஒரு மாணவர் கூட்டத்துடன் வந்து அவர்  என்னை
ரெயில்வே ஸ்டேஷனில் சந்தித்தார்.     அவருக்குச் சொந்த ஜாகை
எதுவும் இல்லை.       போராசிரியர் மல்கானியுடன் அவர் வசித்து
வந்தார்.    ஆகையால் நானும் மல்கானியின் விருந்தினன் ஆனேன்.
என்னைப்   போன்ற ஒருவனுக்கு, அரசாங்கத்தில் வேலை பார்க்கும்
பேராசிரியர் ஒருவர் இடம் கொடுத்து உபசரிப்பது   என்பது அந்தக்
காலத்தில் மிகவும் அபூர்வமான விஷயமாகும்.

     பீகாரில் முக்கியமாக திர்ஹூத்  பகுதியில் இருந்துவந்த சகிக்க
முடியாத மோசமான நிலைமையைக்          குறித்துப் பேராசிரியர்
கிருபளானி எனக்கு விவரமாகக் கூறினார். நான் மேற்கொண்டிருக்கும்
வேலை எவ்வளவு கஷ்டமானது   என்பதையும் தெரிவித்தார். அவர்
பீகாரிகளுடன் நெருங்கிப் பழகி நல்ல தொடர்பு வைத்திருந்தார். நான்
பீகாருக்கு வந்திருக்கும்         வேலையைக் குறித்து முன்னாடியே
அவர்களுடன் பேசியும் இருந்தார்.

     காலையில் சில வக்கீல்கள் சேர்ந்து       என்னைப்  பார்க்க
வந்தார்கள். அவர்களில் ஒருவரான  ராமநவமிப் பிரசாத்தை இன்னும்
எனக்கு நினைவிருக்கிறது.        முக்கியமாக அவர் கொண்டிருந்த
சிரத்தை என் மனத்தைக் கவர்ந்தது. “நீங்கள் என்ன காரியத்திற்காக
இங்கே வந்திருக்கிறீர்களோ அதை நீங்கள் இங்கே     (பேராசிரியர்
மல்கானியின் வீட்டில்)      தங்கினால் செய்யவே முடியாது, நீங்கள்
எங்களில் யாராவது ஒருவருடன் வந்து தங்க வேண்டும்.   கயா பாபு
இங்கே பிரபலமான வக்கீல். அவருடன்         நீங்கள் வந்து தங்க
வேண்டும் என்று அவர் சார்பாக   உங்களை அழைப்பதற்காக நான்
வந்திருக்கிறேன். நாங்கள் எல்லோரும்            அரசாங்கத்திடம்
பயப்படுகிறவர்கள் என்பதை     ஒப்புக்கொள்ளுகிறேன். என்றாலும்,
எங்களாலான உதவியை நாங்கள் செய்வோம்.      ராஜ்குமார் சுக்லா
உங்களிடம்  கூறியவை         பெரும்பாலும்  உண்மையே. எங்கள்
தலைவர்கள் இன்று      இங்கே இல்லாது  போனது வருந்தத்தக்கது.
ஆயினும், பாபு பிரஸ்கிஷோர் பிரசாத்,     பாபு ராஜேந்திரப் பிரசாத்
ஆகிய இருவருக்கும்           தந்திகொடுத்திருக்கிறேன். அவர்கள்
சீக்கிரத்திலேயே இங்கே          வந்து உங்களுக்குத் தேவையான
தகவல்களையெல்லாம்       கூறுவதோடு அதிக   அளவு உதவியும்
செய்வார்கள் என்றே எதிர்பார்க்கிறேன். தயவு செய்து கயா பாபுவின்
வீட்டிற்கு வாருங்கள்” என்று கூறி   ராமநவமிப் பிரசாத் அழைத்தார்.

     கயா பாபுவுக்குத் தொந்தரவு கொடுப்பானேன்   என்று அஞ்சி
நான் தயங்கிய போதிலும் இந்த வேண்டுகோளை என்னால்  மறுக்க