பக்கம் எண் :

அறிவும் திருவும்163

25. வண்மையும் வறுமையும்

பழந்     தமிழ்நாட்டு  வள்ளல்களாய்  விளங்கிய  பாரியும் ஓரியும்,
ஆயும்  அதிகனும்,  மலையனும்  பேகனும்  மாண்ட  பின்னர், முதிராத
வளமுடைய   முதிர   மலைத்    தலைவனாகிய    குமணன்  அருஞ்
சுரத்தினிடையே   அமைந்த  செழுஞ்  சுனை   போல்   இலங்கினான்.
பழுமரம் தேரும் பறவை  போன்று  வறுமையால் வருந்திய மக்கள் இவ்
வள்ளலை     வந்தடைந்தார்கள்;     தமது    குறையைக்    கரவாது
எடுத்துரைத்தார்கள்.   பசி   நோயால்    அன்னையும்    மனைவியும்
மக்களும் வாடி வருந்தக் கண்ட புலவர் ஒருவர்  குமணனிடம்  போந்து
தம் குறையை முறையிட்டார்:

‘ஐயனே!   ஆண்டு பல கண்ட என்னுடைய அன்னை, போகாத தன்
உயிரோடு    புலந்து     தண்டூன்றித்     தள்ளாடி   முற்ற   மளவும்
செல்லமாட்டாத   முதுமையால்   வருந்துகின்றாள். வறுமையால்  வாடித்
தளர்ந்து, ஒருவரையும் பழியாது ஊழைப் பழிக்கும்  உத்தமியாகிய  என்
மனையாள்,   குப்பைக்  கீரையின்  கண்ணிலே   முளைத்த   முதிராத
இளந்தளிரைப் பறித்து, அதனை உப்பின்றி  அவித்து  உண்டு,  உலர்ந்த
மேனியோடு உயிர் வாழ்கின்றாள். பால் மணம்