பக்கம் எண் :

பாரதியார் பாட்டின்பம்261

தான்     ஏற்றமுறும்     காலம்      அண்மையில்   வருமென்று
அறிவிக்கின்றாள்.   ஆதிசிவன்     அருளாலும்   அறிவறிந்த  மக்கள்
ஆர்வத்தாலும்   வீறுபெற்று     விளங்குவேன்’   என்று  தமிழன்னை
வாயிலாகப்   பாரதியார்    கூறும்  வாய்மொழி  கார்மேகத்தினிடையே
இலங்கும் கதிரொளியாகும்.

“வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு”.