பக்கம் எண் :

காவிய இன்பம்93

தானும்     பெற   ஆசைப்பட்டுக்   குட்டுவனும்   வடநாட்டின்   மீது
படையெடுத்தான்;     தமிழரசைப்  பழித்துப்  பேசிய  வடநாட்டாரைப்
போர்க்களத்திலே  வாட்டி   வென்றான்;   இருவரைச் சிறை பிடித்தான்;
தன்   நாட்டிற்குக்   கொண்டு வந்தான். கண்ணகித் தெய்வத்திற்கு அம்
மன்னன்   திருவிழா   எடுத்தபோது   அவ்விருவரும்   உடனிருந்தனர்
என்று   சிலப்பதிகாரம்    கூறுகின்றது.    எனவே,   தமிழ்நாட்டாரின்
வீரப்புகழ்  வடநாட்டிலும்  பரவியிருந்த காலம்; தமிழ்நாடு வாணிகத்தால்
வளம்பெற்று   ஓங்கி  நின்ற  காலம்;   தமிழ்ப்  புலவர்  பல்லாயிரவர்
தமிழ்த்தாய்க்குப்   பல  வகையான   கவிதைக்  கலன்களை  அணிந்து
கோலம்  செய்து கொண்டிருந்த  காலம்;  அக்காலமே சிலப்பதிகாரத்தின்
காலம்.