|
த
தி. நா. சு. வின் பண்டைத்
தமிழெழுத்துகளை நம்பி, தமிழறியாத சிலர் எழுத்துச் சீர்திருத்தம் என்று எழுத்துச் சீர்கேடான
வரிவடிவுகளை வெளியிட்டிருப்பது, எள்ளி நகையாடத் தக்கது.
'L' என்னும் ஒற்றை நேர் கோட்டினின்று
திடுமென்று முச்சுழி 'ண' தோன்றியதென்றும், ஆய்த முப்புள்ளியினின்று `இ' தோன்றிய தென்றும்
காட்டியிருப்பதை நம்புவார், கடுகளவும் பகுத்தறி வுள்ளவராகார்.
வரலாற்றின் மாறாத்தன்மை
மக்கள் விரும்பின், மறைநூல்களையும்
மாற்றலாம். ஆயின், உண்மையான வரலாற்றை எல்லாம் வல்ல இறைவனும் மாற்ற முடியாது. மாற்றின்,
மெய்யனான இறைவன் பொய்யனாகித் தன் இறைமையை முற்றும் இழந்துவிடுவான்.
|
- ``செந்தமிழ்ச் செல்வி''
சனவரி 1979 |
|