பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
6

2
    2. ஒன்றறி கிளவி தறட வூர்ந்த  
  குன்றிய லுகரத் திறுதி யாகும்

(தொல். சொல். 491)

    து ஒன்றுமே அஃறிணை ஒருமை விகுதியாம். ஏனைய அதன் புணர்ச்சித் திரிபாம்.

    எ-டு : போ + இன் + து     = போயிற்று.
  போ + இன் + + து = போயினது.
  பால் + து         = பாற்று.
  தாள் + து         = தாட்டு, குறுந்தாட்டு.
  கண் + து         = கட்டு,குண்டுகட்டு.
     
    3. அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்  
  அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்  
  விளியொடு கொள்ப தெளியு மோரே.

(தொல். சொல். 153)

    அம்ம என்பது முறைப்பெயரோடு சிவணாமைக்கு எத்துணையோ காலஞ் சென்றிருத்தல் வேண்டும். அம்ம என்னும்   முறைப்பெயர் விளியே கேட்பிக்கும் பொருளில் வரும். அம்மையும் அப்பனுமாகிய இருமுதுகுர வரும் ஒருவர்க்கு முன்னறி தெய்வமும் இன்றியமையாதவரு மாதலின், அவர் பெயரே பெரும்பாலும் விளி, வியப்பு, முறையீடு முதலிய பொருள்களில் வரும்.

    எ-டு : அம்மை - அம்மே! அம்மா!
  ஐயன் - ஐய! ஐயோ!
  அன்னை - அன்னே! அன்னோ!
  அப்பன் - அப்பா!
  அச்சன் - அச்சோ!
  அத்தன் - அத்தோ! அந்தோ! (மெலித்தல்)
 
    4. ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த  
  குன்றிய லுகரத் திறுதி யாகும்.

(தொல். சொல். 217)

இது முன்னர்க் கூறப்பட்டது.

   5. ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ

(தொல். எழுத்து. 32)

    இதில் எ, யா கூறப்படவில்லை. எ, ஏகாரத்தினும், யா, ஆகாரத்தினும் அடங்குமெனக் கொண்டார் போலும். நச்சினார்க்கினியர் உரையும் அஃதே.

   6. ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே

(தொல். எழுத்து. 72)

    இதில் நொ பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நோ என்பதே பகுதியாகி நொ எனக் குறுகி நிற்கும்.

     ஏவல் இ.காலம் நி.காலம் எ.காலம் பெயர்
         
     நோ நொந்தான் நோகிறான் நோவான் நோய்
     காண் கண்டான் காண்கிறான் காண்பான் காட்சி

- ``செந்தமிழ்ச் செல்வி'' துலை 1931