பக்கம் எண் :

தமிழ்நாட்டு அரசின் கடமை87

 

தமிழ்ப்பற்றாளர் கொள்கை

தமிழ்ப்பகைவர் கொள்கை

1. தமிழன் பிறந்தகம் குமரிநாடு. தமிழர் தென்னாட்டுப்   பழங்குடி மக்கள். தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர்
2. மாந்தன் பிறந்தகமும் குமரிநாடே  
3. தமிழ்திரவிடத்திற்குத் தாயும ஆரியத்திற்கு மூலமுமாகும். தமிழ் திரவிடத்தை யொத்தது; ஆரியத்தாற் பெரிதும் வளம் படுத்தப்பட்டது.
4. இந்திய நாகரிகம் தமிழரது. இந்திய நாகரிகம் பல இனத்தாரின் கூட்டு நாகரிகம்.
5. தமிழ் இயன்மொழி, தனி மொழி தமிழ் திரிமொழி, கலவை மொழி.
6. கடன் கொள்வதால் தமிழ் தளரும் கடன் கொள்வதால் தமிழ் வளரும்.
7. இறையனாரகப் பொருளுரை யினின்று பெரிதும்     வேறுபட்ட முக்கழகங்கள் பண்டைத் தமிழகத் திருந்தன. பண்டைத் தமிழகத்தில் ஒரு கழகமும் இருந்ததில்லை.
8. தமிழே வழிபாட்டு மொழி யாகவும் சடங்கு மொழியாகவும் இருத்தல் வேண்டும். வடமொழியே வழிபாட்டு மொழியாகவும் சடங்கு மொழியாகவும் தொடர்தல் வேண்டும்.
9. தமிழ்நாட்டிற்கு இருமொழித் திட்டமே ஏற்றது. தமிழ்நாட்டிற்கும் மும்மொழித் திட்டம் ஏற்கும்.
10. இந்தியப் பொதுமொழியா யிருக்கத்தக்கது ஆங்கிலமே. இந்தியப் பொதுமொழியா யிருக்கத்தக்கது     இந்தியே.

  தமிழாசிரியர், வரலாற்றாசிரியர், தொல்பொரு ளாராய்ச்சியாளர், மொழியாராய்ச்சியாளர், மதவாராய்ச்சியாளர் முதலிய பதவிகட்கு, அரசு தமிழ்ப்பகைவரை அமர்த்துதலும், அவர் எழுதிய நூல்களைப் பாடமாக வைத்தலும் கூடாது.

  கொச்சை நடையைக் கையாண்டு தமிழைக் கெடுக்கும் நாட்சரி
(Daily), கிழமையன் (Weekly), மாதிகை (Magazine), காலாண்டிதழ் (Quarterly) , ஆண்டுமலர் (Annual) முதலிய வெளி யீடுகளை அரசு கண்டித்தலுந் தண்டித்தலும் வேண்டும்.