பக்கம் எண் :

தமிழ்மொழித் தோற்றம் 141

கா : உடையது - உடைத்து.
கண் + அது = கண்ணது; கண் + து = கட்டு.
தாள் + அது = தாளது; தாள் + து = தாட்டு.
அன் + அது = அன்னது; அன் + து = அற்று.
பால் + அது = பாலது; பால் + து = பாற்று.

பிற தன்மை வினையீறுகள் தன்மைப் பெயர்களும் அவற்றின் திரிபுமாகும்.

ஒருமை : ஏன் - என். (நான்) - (ஆன்) - அன் - அல்.

பன்மை : ஏம் - எம். (நாம்) - ஆம் - அம். (கண்டும் செய்தும் முதலியவற்றிலுள்ள) உம் - ஓம்.

முன்னிலை வினை

முன்னிலைவினை, ஏவல்வினை செயல்வினை என இருவகைப்படும். செயல்வினை ஒருமை ஈறுகள் முன்னர்க் கூறப்பட்டன.

ஏவல்வினை, ஒருமை பன்மையென இருவகைப்படும். அவற்றுள், ஒருமை பின்வருமாறு எழுவகையாயிருக்கும்:

(1) பகுதி : கா : செய், போது.
(2) முன்னிலைப் பெயரீறுடையது. கா :(செய்நீ) - (செய்தீ)- செய்தி.
(3) வேண்டுகோ ளெதிர்மறைமுற்று. கா : செய்யாய் (செய்).
(4) எதிர்கால வினைமுற்று. கா : செய்வாய்.
(5) நிகழ்கால வினையெச்சம். கா : செய்ய.
(6) தொழிற்பெயர். கா : செயல்.
(7) துணைவினைபெற்றது. கா : செய்ய + விடு = செய்யட்டு.

பன்மையேவல் பின்வருமாறு அறுவகைப்படும்.

(1) முன்னிலைப்பெயரீறு பெற்றது

(நீர்) - (தீர்) - திர்.

கா : செய்திர்.

நூம் - நும் - உம்.

கா : செய்யும்.

உம் + கள் = உங்கள்

கா : செய்யுங்கள்.

உம் + (ஈம்) - (இம்) - இன்.

கா : செய்யுமின், செய்மின்.

(2) வேண்டுகோளெதிர்மறைமுற்று. கா : செய்யீர்.