சுத்தம், மிராசுதார் முதலிய சொற்களுக்குத் துப்புரவு, பண்ணையார் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன. (4) சொற்கள் உண்மை வடிவில் வழங்கல். கா : இராமம் - (நாமம்). (5) அயல்நாட்டினின்று வந்த பொருள்கட்குத் தமிழ்ப்பெயர் வழங்கல். கா : bicycle - மிதிவண்டி. (6) வடபாகத்திலில்லாத பல பயிர்கள் செய்யப் படல். கா : காடைக்கண்ணி, சாமை, குதிரைவாலி. (7) ஓவியவுணர்ச்சி சிறந்திருத்தல். (8) சல்லிக்கட்டு, சிலம்பம் முதலிய மறவிளையாட்டுகள் சிறப்பாய் வழங்கல். (ii) திருச்சிராப்பள்ளி யெல்லையிற் சொற்கள் குறைதல். கா : பரசு (sweep) என்ற சொல் வழங்காமை. (iii) வடார்க்காட்டு அல்லது சென்னைத்தமிழ் கொச்சை மிகல். கா : பரசு (பீராய்), மூஞ்செலி (மூஞ்சூறு). (iv) சென்னைக்கு வடக்கில் மொழிபெயர்தல். “வடவேங்கடம்” என்று, வேங்கடம் தமிழ்நாட்டின் வடவெல்லையாகத் தொல்காப்பியப் பாயிரத்திற் கூறப்பட்டுள்ளது. ஆயினும், “ தமிழ்கூறும் நல்லுலகத்து” என்றதனால், அதைச் செந்தமிழ் நாட்டின் வடவெல்லையாகக் கொள்வதே பொருத்தமாகும். வேங்கடம் இப்போது தெலுங்க நாட்டிற்கு உட்பட்டு விட்டது. தெலுங்கு மிகுதியும் ஆரியத்தன்மையடைந்து, ஆரியத் திற்கும் திராவிடத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளது. தெலுங்கில் எழுத்தொலிகள் வடமொழியிற்போல் வல்லோசை பெறுகின்றன; வகரம் பகரமாகவும் ழகரம்
|