உம்மை என்பது எதைக் குறிக்கின்றது' 'உம்' என்பதைக் குறிக்கின்றது.
ஆங்கில மொழியில் and என்பது செய்யும் (day and night) வேலையைத் தமிழில்
'உம்' (இரவும் பகலும்) செய்கிறது. 'உம்' மறைந்துவிட்டால் உம்மைத் தொகை.
இத்தொகை இரண்டு சொற்களுக்கு இடையில் வரும்; பல சொற்களுக்கு இடையிலும்
வரும். இஃது எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நான்கு வகைப்படும்.
முப்பத்து மூன்று
>
முப்பதும் மூன்றும்
எண்ணல்
உம்மை
கபில பரணர்
>
கபிலரும் பரணரும்
கழஞ்சே கால்
>
கழஞ்சும் காலும்
எடுத்தல்
தொடியே கஃசு
>
தொடியும் கஃசும்
கலனே தூணி
>
கலனும் தூணியும்
முகத்தல்
நாழியே யாழாக்கு
>
நாழியும் ஆழாக்கும்
சாணங்குலம்
>
சாணும் அங்குலமும்
நீட்டல்
சாணரை
>
சாணும் அரையும்
பாண்டியர்
>
சேரனும் சோழனும் பாண்டியனும்
புலி வில் கெண்டை
>
புலியும் வில்லும்
கெண்டையும்
பன்மொழி
உயர்திணையில் எண்ணும்போது முடிக்கும் சொல் பலர்பாலாக
அமைக்கப்பட வேண்டும் (கபிலபரணர்; சேரசோழபாண்டியர்)
கபிலபரணர் என்பதில் இரண்டும் பெயர்ச்சொற்கள்; ஆடல்பாடல்
என்பதில் இரண்டும் தொழிற்பெயர்கள்.