|
New Page 2
பெய்தல் என்ற சொல் கொச்சை
வழக்கில் பேய்தல் என்று வழங்கும். அதனால், "பேய்ந்துங் கெட்டது, ஓய்ந்துங் கெட்டது" என்னும்
பழமொழி எழுந்தது.
பேய் - பேயு - பேசு - பேச்சு.
பேசு - (வ.) பாஷ்
(bhash)
- பாஷா
ஒ.நோ. : தேய்-தேயு-தேசு
(வ.) தேஜஸ். தேசு - (இ.)
தேஜ்.
கொச்சை வழக்கினின்றும் செஞ்சொல்
அல்லது இலக்கணச் சொல்
பிறப்பதுண்டு.
எ-டு : கொண்டுவா - கொண்டா - கொணா
- கொணர். கொண்டா என்பது
கொச்சைச் சொல்லாகவும், கொணா, கொணர் என்பன
செஞ்சொல்லாகவும்,
கொள்ளப்படுதல் காண்க.
இனி, ஆரிய முதனூலானதும், இறைவனாலும்
இயற்றப்படாது என்றுமுள்ளதாகச் சொல்லப்படுவதுமான வேதத்தின் பெயரே, தென் சொல்லின் திரிபாயிருப்பது,
சிறப்பாகக் கவனிக்கத் தக்கதும் மிக மகிழ்ச்சி தருவதுமாகும்.
விழித்தல் = 1. கண்திறத்தல், 2. கவனித்துப் பார்த்தல்,
3. அறிதல், 4.
விளங்குதல், 5. தெளிதல்.
விழி = 1. கண் 2. அறிவம் (ஞானம்). "தேறார்
விழியிலா மாந்தர்" (திருமந்.
177)
விழி -
L.vide, Gk. (w)eid. OE. wit,
Skt.
வித்.
வித் - வேத = அறிவு, அறிவு நூல், மறை.
செவியுறுதல் = கேட்டல்.
செவியுறு - (வ.) ச்ரு - ச்ருதி = 1. கேள்வி, 2. கேட்டறியப்படும்
வேதம்.
முன்னுதல் = கருதுதல்,
AS. mun (to think)
முன்னம் = 1. கருத்து, 2 கருதும் மனம் (திவா.).
முன் - முன்னம் - முனம் - மனம். (வ.) மனஸ்.
L.
mens, E.mind.
மன் + திரம் = மந்திரம் = 1. கருதுந்திறம் 2. (திண்ணிய)
எண்ணம் (பிங்.)
3. சூழ்வு, 4. நிறைமொழியான மறைமொழி. (தொல். செய், 176). 5.
திருமூலர்
திருமந்திரம் 6. பேய்வினை மறைமொழி. (வ.) மந்த்ர.
மன்னுதல் = பொருந்துதல், கூடுதல், நிலைபெறுதல்.
மன் - மன்று - மந்து - மந்தை
மன் - மனை. மன்
+ திரம் = மந்திரம் = 1. வீடு. "மந்திரம் பலகடந்து"
(கம்பரா. ஊர்தேடு. 138) 2. அரண்மனை
(பிங்.). 3.திருக்கோவில் (பிங்.).
|