பக்கம் எண் :

கடிசொலில்லை காலத்துப் படினே81

சம

    சம்பு என்பது ஒருவகைக் கோரை. சம்புதல் என்பது எரிதல். சம்பு-சாம்பு-சாம்பல். சாம்பன்-சாம்பான் = பிணத்தைச் சுடுபவன்.

    அவ்வக் காலத்தில் தோன்றும் புதுச் சொற்களைத் தழுவிக்கொள்ள வேண்டுமென்னும் விதியைக் கூறும் வேறொரு தொல்காப்பியச் சூத்திரம்,

    "குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
    மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
    செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
    வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்
    குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
    இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்

   
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
    முடிய வந்த அவ்வழக் குண்மையின்
    கடிய லாகா கடனறிந் தோர்க்கே"

(மரபு. 69)

என்பது இதன் பொருள் வெளிப்படை. இதன் உரையில், பேராசிரியர்,

    ‘கடனறிந்தோர்’ என்றதனான், வழக்கினுஞ் செய்யுளினும் அவை  வந்தமையிற்     கடப்பாடறிவோர்க்குக் கடியலாகாதென்றவாறு. இன்னும் இப் பரிகாரத்தாலே கோழியை வாரணமென்றலும்,   வெருகினை விடையென்றலும் போல்வன பலவுங் கொள்க. அவை,

    "கான வாரண மீனுங்
    காடாகி விளியு நாடுடை யோரே"

(புறம். 52)

    "வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ"   

(திருமுருகு. 21)

"வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை"

    (புறம். 324)

என வரும், எனக் கூறியுள்ளார்.

    இச் சூத்திரத்திலும் இதனுரையிலும் காட்டப்பெற்ற சொற்கள் யாவும் தூய தமிழ் என்பது வெளிப்படை.

கடுவன்

=

கடுமையானது

கோட்டான்

=

கோட்டில் வசிப்பது

கோடு

=

மரக்கிளை

தத்தை

=

இலை காய் கனியொடு  தொத்திக் கொண்டு கிடப்பது

தொத்துதல்

 

ஒட்டுதல்
"உடுமீன் தொத்தப் பொலிகன கக்கிரி"

(கம்பரா. பிரமாத். 117)

தொத்துதல்

 

தொங்குதல்.
"செச்சைக் கண்டத் தொத்தூன் போல"

(ஞானா. பாயி. 5, 12)

    இவ் விரு பொருளும் தத்தைப் பெயர்க்குப் பொருந்தும். தொத்து-தொத்தை-தத்தை.

    பூசை என்பது வீட்டுப்பூனை. பூசு-பூசை-பூனை-பூஞை. நிலத்திற் பூசினாற்போல மெத்தென்று நடப்பது பூசை. பூனையைப் பூசு பூசு என்றழைப்பது நெல்லை வழக்கு.