இப
இப் பதினாறும் உடையது தமிழ் ஒன்றே.
வடமொழிக்கு ஓரிரு பண்புகள் உள்ளன.
தமிழைப்போற் பிறமொழி கலவாது
பேசத்தக்க மொழி உலகில் வேறொன்றுமில்லை. ஆரிய மொழிகள் பிற தமிழ்ச்சொற்களை விலக்கினும்,
சுட்டுச்சொற்களை விலக்கவே முடியாது. ஆதலால், அவற்றின் உயிர்வாழ்விற்குத் தமிழ்த்துணை இன்றியமை
யாததாம். ஆகவே, தமிழே தேவமொழி என்றும், சமற்கிருதம் இழிமொழி (நீச பாஷை) என்றும்,
தெற்றெனத் தெரிந்து கொள்க.
2. பிராமணன் நிலத்தேவனா?
கதை நீலநரி, தான் நீலத்தொட்டிக்குள்
விழுந்து நீலநிறம் பெற்றதனாலேயே, அரிமாவும் வரிமாவும் கரிமாவும் போன்ற வன்மா விலங்குகளையும்
ஏமாற்றி அடக்கியாண்டது போன்றே, வேதப் பிராமணனும் குளிர்நாட்டு வாழ்க்கையாற் பெற்ற தன்
வெண்ணிறத்தைத் துணைக்கொண்டு, தான் நிலத்தேவன் என்று தமிழரையும் திரவிடரையும் ஏமாற்றி
அடக்கியாண்டான். அந் நீலநரியின் ஊளையால் அதன் இனம் அறியப்பட்டது போன்றே, பிராமணனும்
ஆரிய மாந்தன் என்பது, மேலையாரியத்திற்கு இனமான அவன் மொழியினால் அறியப்பட்டுள்ளது.
உலக வரலாற்றறிவும்
மொழியாராய்ச்சியு மில்லாத பண்டைக் காலத்தில், பழங்குடிப் பேதைமையும் மதப் பித்தமும்
கொடை மடமுங் கொண்ட மூவேந்தரையும் பல்வகையில் வயப்படுத்தி, அவர் வாயிலாகப் பொதுமக்களிடைப்
பிராமணியத்தைப் புகுத்தினர் ஆரியர். அந் நிலைமைகள் இன்றின்மையால், அக்காலத்து மூட நம்பிக்கைகட்கும்
இன்றிடமில்லை.
கடந்த மூவாயிரம் ஆண்டாக, பிராமணர்
கல்வியைக் தம் குலத் தொழிலாகக் கொண்டிருந்ததனால், கல்விக் கேற்ற மனப்பான் மையும் நினைவாற்றலும்
அவர்க்கு மிக வளர்ந்து வந்திருக்கின்றன. ஆயினும், இவ்வளர்ச்சி குலவாரி யளவிலேயே யன்றித்
தனிப் பட்டவர் அளவில் இல்லை. ஏனெனில், இறைவன் கல்வியை எல்லாக் குலத்தார்க்கும்
பொதுவுரிமையாக்கி வைத்திருப்பதொடு, வெவ்வேறு குலத் தனி மக்கட்கே சிறந்த கல்வித் திறமையை
அளித்திருக்கின்றான். ஒரே குலத்தார் கல்வியைத் தம் முற்றுரிமை யாகக் கொள்வது, இயற்கைக்கும்
இறைவன் ஏற்பாட்டிற்கும் மாறானதே.
திருவள்ளுவர் போன்ற அறநூலாசிரியரோ,
கம்பரினுஞ் சிறந்த பாவலரோ, பிராமணர்க்குள் இருந்ததில்லை.
|