பக்கம் எண் :

100தமிழர் வரலாறு-1

இரங்கல், ஊடல் என்னும் ஐந்துஉரிப்பொருளாகப் பிரிக்கப்பட்டும்; அவை முறையேகுறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகியநிலங்கட்கு உரிமையாக்கப்பட்டும் உள்ளன. இப்பிரிப்பும் நிலவுரிமைப்படுத்தமும்,முதனூலாசிரியரின் நெடுங்காலக் கூர்ங்கவனிப்பையும் நுண்மாண் நுழைபுலத்தையும்தெற்றெனக் காட்டுகின்றன. இதனை என் 'பொருளிலக்கணமாண்பு' என்னும் நூலில் விளக்கிக் காட்டுவேன்.


ஐந்திணைப்பெயர் மூலம்

குறிஞ்சி

குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.

குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.

ஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.

கோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.

ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ளகுறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.

முல்லை

முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.

முல் - முள் = 1. கூர்மை. "முள்வாய்ச்சங்கம்" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879).3. ஊசி. 4. பலாக்காய் முனை.

முள் - முளை = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4)