பக்கம் எண் :

74தமிழர் வரலாறு-1

வேண்டும்.வெண்பாவும் வஞ்சிப்பாவுந் தோன்றி நால்வகைப்பாவிலும் இலக்கியம் நடைபெற்றிருக்கும். இசைநாடகக் கலைகளும் வளர்ச்சியுற்று இலக்கியவிலக்கணம் பெற்றிருக்கும். எழுத்து, சொல்,பொருள் என்னும் முக்கூறு தழுவிய பிண்டவிலக்கணமுந்தோன்றி யிருக்கும்.

தமிழர் மீண்டும் வடக்கே சென்றுபரவியிருப்பர்.

வடஇந்தியா திரவிடநாடாகவும்,நடுவிந்தியா மொழிபெயர் தேயமாகவும்மாறியிருக்கும்.

மக்கள் பெருகி ஆள்நிலம் மிகவிரிவடைந்துவிட்டதனால் பாண்டியன்,குமரியாற்றிற்கு வடக்கிற் பனிமலை வரையுள்ளநிலப்பாகத்திற் கீழ்ப்பாதியை ஒருவனும்மேற்பாதியை ஒருவனும் ஆளுமாறு, இரு துணையரையரை அமர்த்தியிருத்தல் வேண்டும்.


வெள்ளி (வெண்பொன்)

செம்பும் வெள்ளீயமுங் கலந்து உறையென்னுங் கலப்புப் பொன்னம் (metal)அமைத்ததற்கு முன்னோ பின்னோ வெள்ளி அல்லதுவெண்பொன் என்னும் பொன்னமும் தமிழகத்திற்கிடைத்துப் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.வெண்ணிற மாயிருப்பது வெள்ளி. வெள்-வெள்ளி.

"இரும்பல்லாத பொன்னத் தனிமங்களுள் (elements)தலைசிறந்து பயன்படுபவற்றுள் ஒன்றான செம்பு,கற்காலத்தின் பிற்பகுதியில் கி.மு. 8000 போல்புதுக் கற்கால மாந்தனாற் கண்டுபிடிக்கப்பட்டுமுதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. செம்புஇயற்கையில் தனிப் பொன்ன நிலையிற்காணப்படுகின்றது. இவ் வியற்கைச் செம்பு புதுக்கற்கால மாந்தன் கல்லிற்கீடாகப் பயன்படுத்தியகருவிப்பொரு ளாகும். அதனின்று அவன் முருட்டுச்சம்மட்டிகளையும் கத்திகளையும் பின்னர் மற்றக்கலங்களையும் அமைத்தான். அதன் சமட்டப்படுந்தன்மையால், அதை வேண்டிய வடிவத்திற்கு அடித்துக்கருவிகளை உருவாக்குவதற்கு மிக எளிதாயிருந்தது.தட்டுவதனாற் செம்பு இறுகிக் கூர்மை மிக்கனவும்நீண்டுழைப்பனவு மான ஓரங்கள் தோன்றின. அப்பொன்னத்தின் பளபளப்பான செம்பட்டை நிறமும்நிலையான தன்மைகளும் அதை மிகுந்தவிலைமதிப்புள்ளதாக்கின."

"இம் முந்து காலத்திற்செம்பிற்காகச் செய்த தேடுகை, இயற்கைச்செம்பைக் கண்டுபிடிக்கவும் அதன்வைப்புகளிலிருந்து அதை யெடுக்கவும் வழிவகுத்தது.கி.மு. 4000 ஆண்டுகட்குச் சற்றுப்