பக்கம் எண் :

இயனிலைப் படலம்79

ல ள ழ மூன்றும் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ல முன்னும் ள இடையும், ழ பின்னும் தோன்றின. ஆதலால், அல்லீறு பின்னர் முறையே அள். அழ் எனத் திரிந்தது.

லகர மெய்யீறு ரகர மெய்யீறாகத் திரியும்.

எ-டு: குடல்-குடர்.

லகரம் தகரமாகவும் திரியும். ஆயின், வல்லின மெய் தமிழில் ஈறாகாமையால் உகரம் ஏறப்பெறும்.

எ-டு: மெல்-மெது.

அள்-குறள் இள்-செதிள் உள்-உருள் அழ்-புகழ்
இழ்-குமிழ்
உழ்-கலுழ்
அர்-வளர்
இர்-குளிர்
உர்- -

துளிரைத் துளுர் என்பது கல்லா மக்கள் உலக வழக்கு.

ரறவும் தமிழில் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ர முன்னும் ற பின்னும் தோன்றின. ரகர மெய்யீறு சிலவிடத்து றகரமாகத் திரியும். றகரம வல்லின மெய்யாதலின், உகரம் ஏறப்பெறும்.

எ-டு: ஒளிர்-ஒளிறு

அர்-அறு
இர்-இறு
உர்-உறு
எ-டு : சிதறு
எ-டு : குளிறு
எ-டு : குமுறு

நால்வகை யீறுகள்

தனியீறு, கூட்டீறு, திரியீறு, விரியீறு என ஈறுகள் நால்வகைப் படும். ‘அம்‘ போன்றது தனியீறு; ‘அம்பு‘ (அம்+பு), ‘அம்பம்‘ (அம்+பு+அம்) போன்றவை கூட்டீறு. அன், அல், அள், அழ், அர், அது, அறு என்பனவும் இவற்றிற்கொத்த இகர வுகர முதலீறுகளும் திரியீறு; ‘அக்கு‘ (அ கு-அக்கு), அத்து (அது-அத்து) போன்றன விரியீறு.

இவற்றிற் கெடுத்துக்காட்டு வருமாறு:

ஈறு எடுத்துக்காட்டு
அம்-அம்பு
அம்-அம்பு-அம்பம்
அம்பு
அம்பு-அம்பம்
புறம்-புறம்பு
அரம்-அரம்பு-அரம்பம்
வில்-விளம்பு
சிலம்பு-சிலம்பம்