பக்கம் எண் :

150தமிழர் வரலாறு-2

இக் குற்றம் பேராயத்திற்சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட வகுப் பார்க்கோபன்மடங்கு பெரிதாகும்.

ஆங்கில வரசு பல்கலைக்கழகக் கல்விநிலையங்களில்தான், தாழ்த்தப்பட்ட வகுப்புமாணவர்க்கு இடந்தர முடிந்தது. மேல்வகுப் பார்நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளிலும், தொடக்கப்பள்ளி களிலும், கீழ் வகுப்பாரும் இடம்பெறச்செய்தது நயன்மைக் கட்சி யாட்சியே. அதன்பின்னரே, காந்தியடிகளின் முயற்சியால்,பேராயமும் நயன்மைக் கட்சியைப் பின்பற்றியது.ஆயினும், குலங்களின் பிறவித் தொடர்பைக்காந்தியடிகள் நீக்க இயலவில்லை.

பேராயத் தமிழத் தலைவர் செய்தநன்மையெல்லாம், மனுதரும முறைப்படி பிள்ளைகள்பெற்றோர் தொழிலை மேற்கொள்ள வேண்டு மென்றுஆச்சாரியார் புகுத்த விருந்த தொடக்கக் கல்வித்திட்டத்தைத் திரு. காமராசர் தடுத்ததும்;திருவையாற்று அரசர் கல்லூரி விடுதியில்,பிராமணன் சமைத்த வுண்டியைப் பிராமணமாணவர்க்குத் தனியிடத்திற் படைத்து வந்தவழக்கத்தை, தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவர்நாடிமுத்துப் பிள்ளை நிறுத்தியதுமே. இவை நயன்மைக்கட்சி யாட்சியிலும் நடந்திருக்கும் என்பதைச்சொல்லவேண்டுவதே யில்லை.

ஆங்கிலேயர் வந்திராவிடின், ஒரேயொருவையாபுரி தவிர மற்றெல்லா அமைச்சரும் பிராமணராயிருந்திருக்கக்கூடிய நிலைமை, இன்றில்லையேஎன்றெண்ணித்தான், அக் குலத்தார், நயன்மைக்கட்சியையும், அதன் கான்முளையாகிய தி.மு.க.வையும்,காட்டிக் கொடுக்கும் கூட்ட வகையார் (Quislingvariety) என்று பழிக்கின்றனர்.இத்தகைய குற்றச்சாட்டு, நாட்டு மக்கள்வாயினின்று வரத்தக்கதே யன்றி, நாட்டைக்கெடுக்கும் வந்தேறிகள் வாயினின்று வரத்தக்கதன்று.

தி.மு.க. பொதுவுடைமைக் கொள்கையைப்படிப்படியாகத் தழுவுவதால், பொதுவுடைமைக் கட்சிஇனிப் பிரிந்து நிற்க வேண்டுவ தில்லை.


தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை

வெள்ளைக்காரனை விரட்டிவிட்டோமென்றும், நாட்டிற்கு விடுதலை வாங்கித்தந்தோமென்றும், பேராயத்தார் நாக்கடிப்பாகவாய்ப்பறை யறைந்துவரினும், ஆங்கிலன் நீங்கிக்கால்நூற்றாண்டான பின்னும், தமிழ்நாடு விடுதலைபெறவில்லை.

சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும்இடைப்பட்ட நிலைமை, தாக்குவோனுக்கும்தற்காப்போனுக்கும் இடைப்பட்ட தொத்ததே.தமிழன் தாழ்வு பிராமணன் உயர்வு என்ற முறையிலேயேதமிழின்