எந்த நிலையிலாவது மீண்டும் விருப்பப் பாடமாக்குமாறு, தமிழ்நாட்டு அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
'அக் கழகம் முதலமைச்சருக்கு
விடுத்த வேண்டுகோள் மடலில், சமற்கிருதத்தை 10ஆம் 12ஆம் வகுப்புகளில் மட்டும் தெரிப்புப்
பாடமாகக் கற்குமாறு இன்றுள்ள ஏற்பாடு 'நிரம்பக் குறைவானது' என்று கூறியுள்ளது. 6ஆம்
வகுப்பிலிருந்தே அதைக் கற்குமாறு ஏற்பாடிருத்தல் வேண்டும்.
"மா பெரும்பாலான
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சமற்கிருதம் கற்கப்பட்டு வருவதாக அக் கழகம் கூறியுள்ளது.
பத்தாயிரத் திற்கும் குறையாத பாடசாலைகளில், வாழ்நாள் முழுதும் சமற்கிருதக் கல்வி யேற்றுக்கொண்ட
ஆடவர், அம் மொழியை வழங்கும் கல்வி வாயிலாகவே ஆள்கின்றனர். இத் தேயத்தில் ஐம்பதினாயிரவர்க்குக்
குறையாது அதில் விரைவாகப் பேசுகின்றனர்.
"பலர் பூசாரித் தொழிலை
மேற்கொண்டு இந்துமதப் பண்பாட்டுக் காவலராகத் தொண்டு புரிகின்றனர். பத்திலக்கத்திற்கு மேற்பட்ட
மக்கள் வாழ்க்கை, பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்ச்சிகளிற் சமற்கிருதத்திற் சமயச்
சொலவங்களை மன்றாட்டு வடிவில் எதிரொலிக்கிறது.
"பண்டைக் காலத்தில்
சமற்கிருதத்தில் இலக்கக் கணிதம்