பக்கம் எண் :

146தென்சொற் கட்டுரைகள்

New Page 1
  "தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைகண் டாரு மஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத் தன்னா னுருவுகண் டாரை யொத்தார்."
 
 
 

 (1 : 20 : 19)

  "சாகாவ ரத்தலைவ ரிற்றிலக மன்னான்
ஏகாவ ரக்கிகுடர் கொண்டுடனெ ழுந்தான்
மாகால சைப்பவட மண்ணினுற வாலோ
டாகாய முற்றகத லிக்குவமை யானான்."
 
 
 

(5 : 1 : 85)

 என்னும் கம்பவிராமாயண வுவமைகளையும் வெல்வன இந் நானிலத்தில் எந்நிலத்து நூலினு முண்டோ?

  "இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே."
 
 
 

(1514)

  "மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்"
 
 
 

(2290)

என்னும் திருமந்திரத்தினுஞ் சிறந்த வுண்மைகளை உபநிடதங்கள் எடுத்துக்கூற முடியுமோ? மேலும், வடமொழி ஆகமங்கள் போன்றே உபநிடதங்களும் தமிழ்நூல்களின் வழியனவே என்று கட்டுரையாளர் அறிவாராக. ஐம்பூதங்களையும் இயற்கைத் தோற்றங்களையும் வானச் சுடர்களையும் சோமச் சாற்றையும் தெய்வமாக வணங்கிவந்த பிள்ளை மதி யாரியர், திடுமென முழுமுதற் கடவுட்கொள்கையும் மெய்ப்பொருள் மூதறிவுங் கொண்டாரெனின், குப்புறக் கவிழாத குழவி குதித்தெழுந்தோடின தென்பதொக்கு மன்றோ!

  "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லோ டவ்வேழ் நிலத்தும்"
 

(செய்.78)

  "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப"
 

(செய்.176)

என்று தொல்காப்பியங் கூறுவதால், உபநிடதங்கட்கு மூலமான தமிழ் நூல்களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன என அறிக. மேலும், உப-நி-ஸத் என்று பிரியும் உபநிஷத் என்னும் கூட்டுச்சொல்லின் முதன்மையான உறுப்பாகிய ஸத் என்பது, குந்து என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபே.

    குத்து - குந்து - ME. squat, L, sed, OE., OS., Sit., Skt. sad, இனி,