11
11
கருமம் தமிழ்ச் சொல்லே!
கருமம் என்பது, குமரிக்
கண்டத்தில் கரு என்னும் முதனிலை யினின்று தோன்றித் தொன்றுதொட்டுத் தமிழில்
வழங்கிவருவதும், அடிநாளில் ஐரோப்பா சென்ற தமிழர் அல், திரவிடர் மொழியிற்
கலந்திருந்ததுமான தூய தமிழ்ச் சொல்லாகும்.
|
கருமம்
|
=
|
செயல், தொழில், கடமை.
R.V. karman
|
|
கரு - கருமை - கருமம்.
|
|
ஒ.நோ:
|
பரு
|
-
|
பருமை
|
-
|
பருமம். |
|
|
உவ
|
-
|
உவமை
|
-
|
உவமம். |
மகரவீற்றுப்
பெயர்கள் தமிழிலும் னகர வீறாகத் திரிதலுண்டு.
எ-டு : பருமம் -
பருமன். உவமம் - உவமன்.
கரு-த்தல் =
செய்தல். இது வழக்கற்றுப் போன தமிழ் வினைகளுள் ஒன்றாம். அட்டு, பொட்டு, கள், நன் முதலிய
பல வினைகள் வழக்கற்றுப் போனமை காண்க.
|
அட்டுதல் |
=
|
வார்த்தல் |
|
பொட்டுதல் |
=
|
பொருத்துதல், கட்டுதல்
|
|
பொருத்து |
-
|
பொத்து
|
-
|
பொட்டு |
|
பொட்டு |
+
|
அணம்
|
-
|
பொட்டணம். |
|
ஒ.நோ:
|
கட்டு
|
+
|
அணம்
|
=
|
கட்டணம் |
|
|
கட்டல்
|
=
|
களவு
செய்தல். |
கள்ளாமை = களவு செய்யாமை.
|
|
|
நட்டல்
|
=
|
நட்புச்
செய்தல். |
|
ஒருபொருள்
பற்றிப் பல சொல்லியிருப்பின், அவற்றுள் ஒன்றும் சிலவும் வழங்கப்படாமற் போதல் இயல்பே.
கரு-த்தல் என்னும் சொற்கு
இருவகையில் வேர்ப் பொருள் கூறலாம்.
|
1.
|
கருமை = பெருமை (திவா.),
மிகுதி. கடு - கரு. |
|
|
கடுத்தல் = மிகுதல்.
"நெஞ்சங் கடுத்தரு" (குறள். 706) |
|
|
கருத்தல் = முன இல்லாத
தொன்று மிகுமாறு செய்தல், செய்தல். |
|
|
|