பக்கம் எண் :

30மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

கொள்ளப்படுதற்கு ஏற்றதே. ழகரத்தைப் போன்றே ளகரமும்,
கொடுந்தமிழ்களிலும் பிற மொழிகளிலும் சகரவகையாகத் திரிதல் இயல்பே.

     இனிக் கலி, களி, கத்து முதலிய சொற்களுள் ஒன்றன் அடியாகக்
கொள்ளின், 'to roar', என்ற மொழிப்பொருட் காரணமும் பொருந்தும்.

     கயம் - கயவு = கரிக்குருவி, கீழ்மை, மென்மை, பெருமை.

     கயம் - காயம் = கரிய வானம்.

     "விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்"(தொல். எழுத்து. 305)

     கயம்-காசம்-ஆகாச (வ.), 'ஆ' ஒரு முன்னொட்டு (உபசர்க்கம்).

     பல்வேறு முன்னொட்டுகளை முற்சேர்த்தல், வடவர் தென்சொற்களை

     வட சொற்களாக்கும் வகைகளில் ஒன்றாம்.

     காயம்-காயா = கரிய மலர்கொண்ட ஒருவகை மரம். காயாம்பூ

     வண்ணன் = கரிய திருமால்.

     காயம்-காயல் = கரிய உப்பங்கழி.

     காயல்பட்டினம் என்னும் துறைநகர்ப் பெயரை நோக்குக.

     கள்-காள்-காளம் = கருமை, காளமேகம் = கருமேகம்.

     காள்-காளி = கரிய மாரியம்மை.

     ஒ.நோ:மா-மாயோள் (காளி) = கரியாள்.

          மாமை = கருமை.

     காளம்-காளான் = கரிய ஆம்பி.

     காள + ஆம்பி = காளாம்பி (கருங்காளான்).

     காள்-காளை = கரிய எருது, எருது.

     காள்-காழ், காழ்த்தல் = கருத்தல், கருத்து வயிரங் கொள்ளுதல்,

     வேலை செய்து கை வயிரங் கொள்ளுதல், முதிர்தல், கடுத்தல்,
உறைத்தல். 'காழ்ப்பேறுதல்' என்னும் வழக்கை நோக்குக.

     காழ்ப்பு = வயிரம், கைவயிரங் கொள்வதால் ஏற்படும் தழும்பு,
உறைப்பு.

     காழ் = கருமை, குற்றம், மரவயிரம், கரியவிதை, விதை, விதை
போன்ற மணி அல்லது முத்து, முத்தின் ஒளி.

     காழ்-காழகம் = கருமை.

     காழ்-காய், காய்தல் = வெப்பத்தால் கருகுதல், வெப்பங் கொள்ளுதல்,
உலர்தல், வெப்பத்தால் எரிதல், எரிதல்போற் சினத்தல்.

     காய்-காய்ச்சு = வெப்பத்தாற் சமை. காய்-காய்ச்சல். காய்த்தல் =
வேலை செய்து கையில் தழும்பேறல் (கருங்கை, 'கையிற் காய்ப்புக் காய்த்தல்'
முதலிய வழக்குகளை நோக்குக.)

     வயிரங் கொள்ளுதல், முதிர்தல், மரம் முதிர்ந்து பலன் தருதல்.