கணிசம்-கணிசி. கணிசித்தல்=மதித்தல், உய்த்துணர்தல், சிந்தித்தல். கணி - குணி. குணித்தல் = மதித்தல், அளவிடுதல். கண்=கண் போன்ற வரையுள்ள மூங்கில் முதலியவற்றின் கணு. "மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்" (பெருந்தொ. 634) கண் - கணு. கணு - கணை = கணுப்போன்ற திரட்சி. கணைக்கால் = கணுக்கால். கணை-கணையம் = திரண்டமரம். கண் = இடம், பக்கம். கண் + சி - கட்சி-கக்ஷ் யா (வ.). கண் - கண்டு = கணுப்போன்ற துண்டு, துண்டாகிய கட்டி, நூலுருண்டை. கண்டு-கண்டம்-khanda (வ.) = துண்டு, நிலப்பகுதி, பகுதி. 'உப்புக் கண்டம்', 'கண்டங் கண்டமாய் நறுக்குதல்' முதலிய வழக்குகளை நோக்குக. ஒ.நோ: துண்டு - துண்டம். கண்டம் - காண்டம்-kanda (வ.) = நூற்பகுதி. கண்டம் - கண்டிகை = நிலப்பகுதி. கண்டிகை-காண்டிகை = khandika (வ.) = துண்டுபோற் சுருங்கிய வுரை. கண்டு-கண்டி-khand (வ.). ஒ.நோ: துண்டு - துண்டி. கண்டித்தல் = துண்டித்தல், துண்டித்தல் போலக் கடிதல், வரையறுத்தல், கண்டிப்பு = வரையறவு, கடுமையான ஒழுங்கு. கண்டி - கடி. ஒ.நோ: தண்டி - தடி(வி.). கடிதல் = கண்டித்தல், விலக்குதல். கண்டி + அனம் = கண்டனம் - kandana (வ.). கண்டி - கண்டிதம் - khandita (வ.) = கண்டிப்பு, வரையறவு. கண்டிதம் - கண்டிசம். கண் - கண்ணி = கண்கண்ணாகக் கட்டிய மாலை, கண்போன்ற துவாரமுள்ள வலை, துவார முள்ளது. (எ-கா : பலகண்ணி-பலகணி = சன்னல்). கண் - காண் = கண்ணால் பார்(வி.). காண் - காணம் = மேற்பார்வை. 'கண்காணம்' என்பது வழக்கு. கண்காணி = மேற்பார்ப்பவன். கண்காணியார் = அத்தியட்சர் (Bishop), சபையை மேற்பார்ப்பவர். காண்-காட்சி = பார்வை, அறிவு, ஞானம். |