ஏராளம்:ஏர் = கலப்பை. ஆள் + அம் = ஆளம் = ஆளின் தன்மை. ஏராளம் = உழவன் வருவாய்போல் மிகுதியாயிருத்தல். உழவன் நேரடியாயும் மிகுதியாயும் உணவுப்பொருளை விளைவித்தலின் பொருள் மிகுதி ஏராளமெனப்பட்டது. அம் மிகுதியினாலேயே உழவன் வேளாண்மை செய்து வேளாளனாயினன். ஒள'வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான்". (திரிகடு. 12) தாராளம்:தார் = சேனை. ஆளம் = தன்மை. தாராளம் = படைமறவர் போல், விருப்பம் போலப் பிறர் பொருளைக் கையாடுதல் அல்லது வழங்கல். இன்றும் படைமறவர் பிறர்பொருளை மனம்போற் பயன் படுத்தலும் கொள்ளை யடித்தலும் காண்க. சிங்கியடித்தல்:சிங்கி = தாளம். அடித்தல் = தட்டுதல். சிங்கி யடித்தல் = இரப்போன் தாளம் தட்டி இரப்பதுபோல் திண்டாடுதல். தாளக்கருவியை உருவக(ரூபக) தாளத்தில் தட்டினால் சிங்சீயான் என்ற ஒலியெழும். இதனால், தாளக்கருவிக்குச் சிங்கியென்றும் சீயான் என்றும் இருபெயருண்டு. தாயமாடல்:தாய் + அம் = தாயம் = தாயினின்று பெறும் உரிமை. ஆடல் = விளையாடல். தாயமாடல் = சீட்டுப் போடுவதுபோல் முத்தும் பலகறையும் போட்டு உடன்பிறந்தார் பாகம் பிரித்தல்; முத்தினாலும் பலகறையாலும் விளையாடிப் பிறர் உரிமையைப் பெறுதல் அல்லது பறித்தல்; தாயமாடிக் காலத்தை வீண்போக்குவதுபோல் வேலை செய்யாமற் காலங் கழித்தல் அல்லது தாழ்த்தல்; ஒளவேலை தாயமாடுகிறதுக என்னும் வழக்கை நோக்குக. மினுக்கிடுதல்:> மினக்கிடுதல் > மெனக்கிடுதல், மினுக்கிடுதல் = அலங்கரித்தல். அலங்காரத்திலேயே கருத்தாயிருந்து வேலையைக் கை நெகிழவிடல். ஒளவேலை மினக்கிடுதல்க என்னும் வழக்கையும் ஒளதேவடியாள் சிங்காரிக்குமுன் தேர் நிலைக்கு வந்துவிட்டதுக என்னும் பழமொழியையும் நோக்குக. "செந்தமிழ்ச் செல்வி" சுறவம் 1943 |