|
| தேவியரை, வேளாட்டியராக அல்லது அடிமையராக வாழும்படி வைத்த அரணிடம் அல்லது சிறைக்கோட்டம். "மீனவர் கானம்புக....வேளம் புகு மடவீர்" (கலிங். 41). "வீரபாண்டியனை முடித்தலை கொண்டு அவன் மடக் கொடியை வேளமேற்றி" (S.I.I. iii, 217). |
| வேள்+நாடு = வேணாடு, திருவாங்கூர் அரசியத்தின் பெரும் பகுதி அடங்கிய நிலப்பகுதி, பண்டைப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று. |
| வேள்-வேண் = 1. விருப்பம் (யாழ். அக.). ம.வேண். 2. வேணாடு. "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி" (நன். 272,மயிலை). | | வேண்+அவா = வேணவா (மீமிசைச்சொல்) = பெரு விருப்பம், வேட்கைப் பெருக்கம். இதை வேட்கை+அவா என்று பிரிப்பது பொருந்தாது. | | வேள்+மகன் = வேண்மகன் - வேண்மான் = வேளிர்குலமகன், வேளிர் குடியான். "நன்னன் வேண்மான்" (அகம். 97). | |
| வேள்+மகள் = வேண்மகள்-வேண்மாள் = 1. வேளிர் குல மகள், வேளிர் குடியாள். "வேண்மாள் அந்துவஞ்செள்ளை" (பதிற். 9ஆம். பதி). |
| வேள்-வேட்கை = 1. விருப்பம். 2. பற்றுள்ளம். "வேட்கை யெல்லாம் விடுத்து....உன் திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கட் கூட்டினை" (திவ். திருவாய். 4:9:9). 3. காமவிருப்பம். (நம்பியகச்.36, உரை). 4. சூலியர் வயா. 5. தாகம், நீர் விருப்பம். |
| வேள்+நீர் = வேணீர் = தாகந் தணியப் பருகுநீர் "வேணீ ருண்ட குடையோ ரன்னர்" (கலித். 23). | |
| வேட்கைநீர் = தாகந் தணிக்கு நீர் (W.). |
| வேள்+நூல் = வேணூல் = காமநூல் "அம்மட வாரிய லானவும்... ஆடவர் செய்கையும்....விளம்பிடும் வேணூல்" (கந்தபு. இந்திரபுரி.25). |
| வேள்-வேட்பு=விருப்பம் (யாழ். அக.). |
| வேட்பு-வேட்பாளர் (இக்கா.) = நாடாளுமன்ற அல்லது நடுவணாளு மன்ற வுறுப்பாண்மை விரும்புவோர். |
| வேள்-வேட்சி = விருப்பம். "வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே". (திருமந். 437). | |
| வேள்-வேட்சை = விருப்பம் (யாழ். அக.). |
| வேள்-வேண்டு. வேண்டுதல் = 1. விரும்புதல். "பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன்" (கலித். 145). 2.மன்றாடுதல் (பிரார்த்தித்தல்). "வேண்டித் தேவரிரக்கவந்து பிறந்ததும்" (திவ். திருவாய். 6:4:5). 3. கோருதல். அண்மையில் வெளிவர விருக்கும் எங்கள் கழகஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை விடுக்குமாறுதங்களை வேண்டுகின்றேன் (உ.வ.). |