பக்கம் எண் :

பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒருதனியே நின்றா னுளன்.

(இ - ள்.) விளைவறியாத பிள்ளையையொப்பப் பிணம் பெருக்க வீரரை வெட்டி வெட்சியார் கொள்ளைகொண்ட ஆனிரையைக் கிட்டினார் இகழ்ந்து பூசற்செய்து கெட்டு மீண்டுபோகவும் மீளானாகித் தனியே நின்றான் ஒரு பூங்கழலானுளன். எ - று.

(7)

29. பிள்ளைத் தெளிவு

கண்மகிழ்ந்து துடிவிம்மப்
புண்மகிழ்ந்து புகன்றாடின்று.

(இ - ள்.) துடியின்கண் மகிழ்ந்தொலிப்பத் தன்புண்ணைப் பிரியப்பட்டு விரும்பிக் கூத்தாடியது. எ - று.

அதனைப் புகழ்ந்தாடியதூஉமாம்.

வ - று. மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன்
பூவா ளுறைகழியாப் போர்க்களத் - தோவான்
1துடியிரட்டி விம்மத் தொடுகழலார் முன்னின்
றடியிரட்டித் திட்டாடு மாட்டு.

(இ - ள்.) பகைவர் உயிருலரத் தலையினை நீக்கிக் கவந்தமாக்கி நின்ற பிள்ளைத்தன்மையை எய்தியவன் பொலிவினையுடைய வாளினை உறையினின்றும் வாங்கிப் பூசற்களரியிலேயொழியான் துடிகொட்டி ஆர்ப்பரவ மிகக் கட்டிய வீரக்கழலினையுடையார் முன்னே நின்று இட்ட? வடியின்மேல் அடியிட்டு ஆடுங்கூத்து. எ - று.

ஆட்டு ஓவானென்க. எ - று.

(8)

30. பிள்ளை யாட்டு

கூடலர்குடர் மாலைசூட்டி
வேறிரித்து விரும்பியாடின்று.

இ - ள். பகைவர்குடராகிய மாலையைச் சூட்டிக் கையிலே வேலைத்திருப்பிப் பிரியப்பட்டு ஆடியது எ - று.

வ - று.1மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து
கூட்டிய வெஃகங் குடர்மாலை - சூட்டியபின்
மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேறிரிய விம்முந் துடி.

(இ - ள்.) பகைவரை மாளப்பண்ணின பிள்ளைத்தன்மையை எய்தியவன், வீரருடைய மார்பங்களைத் திறந்து தெரிந்து பறித்தவேலைப் பகைவருடைய குடர்மாலையைச் சுற்றியபின் மாறுபாடு கெடக்கோபித்து ஆடுமவன் கைக்கொண்ட வேலைத் திருப்பக் கறங்கா நின்றது துடி எ - று.

(9)


1. தொல். புறத். சூ. 5, இளம்.மேற். (பி-ம்.) 2. 'துடியு ருட்டி விம்ம'