பக்கம் எண் :

93

10

சுல்3 (சிவத்தற் கருத்துவேர்)

சுல் - சுல்லி = 1. அடுப்பு. 2. மடைப்பள்ளி, சுல் - சுள். சுள்ளல்= சுடுதல், காய்தல்.

சுல் - சுல்லம் = செம்பு (மலை.). சுல்லம் - வ. சுல்ல.

சுல் - சுல்வு - சுல்வம் = செம்பு. “சுல்வத்தா லமைத்த நெடுங்களத்தின்’’ (சேதுபு. தனுக்கோ. 9). சுல்வம் - வ. சுல்வ.

நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்புக் கருத்தினின்று சிவத்தற் கருத்துத் தோன்றிற்று.

ஒ.நோ : எரி = நெருப்பு, சிவப்பு. எரிமலர் = 1. சிவந்த முருக்கமலர். 2. செந்தாமரை.

செம்பு செந்நிற மாழை (உலோகம்). அதனால் அப் பெயர் பெற்றது.

சுல் - செல் - சேல் = செந்நிறக் கெண்டைமீன்.

சேல்விழி = சேல்மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண். “சேலுண்டவொண்க ணாரிற் றிரிகின்ற செங்காலன்னம்’’ (கம்பரா. நாட்டுப். 13).

செல் - செள் - செட்டு - செட்டி = 1. சிவந்த அடியையுடைய வெட்சிச்செடி. “செங்கால் வெட்சி’’ (திருமுருகு. 21). 2. சேயோன் (செந்நிற முருகன்).

செட்டு - செச்சு - செச்சை = 1. சிவப்பு. “செச்சைவாய் திறந்து’’ (திருவிளை. வலை. 24). 2. வெட்சி. “செச்சைக் கண்ணியன்’’ (திருமுருகு. 208). 3. செந்துளசி (மலை.).

செச்சு - செஞ்சு = செம்மை, செவ்வை, நிறைவு. “செஞ்சுறு செஞ்சுடர்’’ (திருமந். 1713).