பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

மக்களின் பழக்கவழக்கங்கள் முதன்முதல் நகர் அல்லது நகரத்திலேயே திருந்தின. அதனால், சிற்றூர் வாணனையோ நாகரிகமில்லாதவனையோ நாட்டுப்புறத்தான் என்று இழித்துக் கூறுவது இன்றும் வழக்கமா யிருக்கின்றது. வாழ்க்கைத் திருத்தம் அல்லது பண்பாடு நகரத்தில் தோன்றியதானாலேயே, நாகரிகம் என்னும் பெயர்த்தாயிற்று.

நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம்.

நகரிப் பழக்கம் = நகர்வாணரின் திருந்திய ஒழுக்கம்.

நகர்ப்புறத்தான் (நாகரிகன்) x நாட்டுப்புறத்தான் அல்லது பட்டிக்காட்டான் = திருந்தாத பழக்கவழக்கத்தான்.

ஒ.நோ.: E. urban = living in a city or town, urban = polite, urbanity = polished manners.

L. civis = citizen, civil = polite, civilization = advanced stage in social development.

முதற்கண் நகரங்களில் வழங்கியதனாலேயே, இற்றை வடமொழி யெழுத்து நாகரி யெனப்பட்டது. வடமொழி தேவமொழி யென்னும் ஏமாற்றினால், அது தேவநாகரியென வழங்கும்.