வார் - வார்ப்பு - வார்ப்படம் = காய்ச்சியுருக்கி வார்த்துச் செய்தது. “வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே.” (புறம். 812) ஒரு கலத்திலுள்ள நீரை ஊற்றும்போது அதிலுள்ள மண்டியைத் தடுத்தற்குக் கலத்தின் வாயில் துணிகட்டுவது, வடிகட்டுதல் எனப்படும். இதை வடார்க்காட்டார் வேடு கட்டுதல் என்பர். வெயிலுக்குத் தலையில் துணிகட்டுவதையும் ஒப்புமைபற்றி வேடுகட்டுதல் என்பதுண்டு. xv. வார்தல் (நீளல்) வடியும் நீர்ப்பொருள் நீண்டு நேராக விழுமாதலின், வடிதற் கருத்தில் நீட்சிக் கருத்தும் நேர்புக் கருத்தும் தோன்றின. காதை நீட்டி வளர்த்தலைக் காது வடித்தல் என்பர். “குழைவிரவு வடிகாதா” (தேவா. 1091:1) வடி - வரி - வரிசை. வரி - வரிச்சு - வரிச்சல் = நீண்ட குச்சு. வடி - வார். வார்தல் = நீளுதல், நேராதல், நீளக்கிழித்தல். “வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள” (தொல். உரி. 19) வார் - வாரி = நீண்ட பெருங்கம்பு. வார் - வாரை = நீண்ட பெருங்கம்பு. வாரைவதி = ஆற்றின் குறுக்காக வாரையால் அமைக்கப்பட்ட வழி, பாலம். வாரைவதி - வாராவதி. வார் = நீண்ட தோல்துண்டு. வார் - வால் = நீண்ட வுறுப்பு. வால் - வாலம் = வால், நீட்வால முகம் = நீண்டமுகம். வாள் = நீண்ட கத்தி. வாளம் = நீண்ட வார், கம்பி. வாள் - வள் - வள்பு = வார். வார் - வாரம் = சொல்லொழுக்கமும் இசையொழுக்கமு முள்ள பாடல். xvi. வழுக்கை மொட்டையான பொருள்கள், சிறப்பாக மழித்த தலை, வழுக்கையாயிருப்பதால், மழுக்கைக் கருத்தினின்று வழுக்கைக் கருத்துப் பிறந்தது. உள் - (இள்) - இழு - இழும். இழுமெனல் = வழுவழுப்பு. |