பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

இனி, குரல் வேறுபாட்டாலும் மாத்திரை வேறுபாட்டாலும் அசையழுத்த வேறுபாட்டாலும், ‘ஊங்கொட்டல்’ வியப்பு இழிப்பு வெறுப்பு வெகுளி முதலிய பல குறிப்புகளையும் உணர்த்தும். அன்று அததற்குரிய முகக்குறிப்போடு கூடிவரும்.

இனி, விலங்குகளையும் பறவைகளையும் விளிக்கப் பயன் படுத்தும் ஒலிகளும் ஒருசார் குறியொலிகளே.

ஆட்டை அழைக்கும் ஒலி-பாய்!
மாட்டை அழைக்கும் ஒலி-பா!
நாயை அழைக்கும் ஒலி-சூ சூ ! தோ தோ! துவா துவா!
கோழியை அழைக்கும் ஒலி-பே பே!

இனி, சரியாய் ஒலித்துக்காட்ட முடியாதனவும் மொழிக்குப் பயன்படாதனவுமான, எத்துணையோ குறியொலிகள் உளவென அறிக.

4. வாய்ச்செய்கையொலிப் படலம்

சில வாய்ச் செய்கைகளால் ஏற்படும் வாய்நிலைகளை, அச் செய்கைகளைக் குறிக்குஞ் சொற்கள் முற்றுமாயினும் ஒரு மருங் காயினும் அமைக்குமாயின். அவை வாய்ச்செய்கை யொலியடிப் பிறந்தவையாம்.

எ-டு:
செய்கைசெய்கைக்கேற்கும் ஒலிசொல்
வாய்திறத்தல்அ, ஆஅங்கா
வாய்திறத்தல்வாய் (பெருமூச்சிற்கும் கொட்டாவிக்கும்) ஆவி
வாய்ப்பற்றுதல்அவ்அவ்வு - வவ்வு - கவ்வு
பல்லைக் காட்டுதல்இளி
காற்றை வாய்வழி முன்றள்ளல்ஊது

‘ஆ வென்று வாயைத் திறக்கிறான்’, ‘ஈ யென்று பல்லைக் காட்டுகிறான்’ என்னும் வழக்கையும் அவ் என்று சொல்லும்போது கவ்வுகிற வாய்நிலை யமைவதையும் காண்க.