பக்கம் எண் :

87

புள் - புரி - புரிசை = நகரைச் சுற்றியுள்ள மதில்.

புரி - பரி. பரித்தல் = சூழ்தல்.

“குருதி பரிப்ப”                                                (அகம். 31)

பரிவேடம் = ஊர்கோள்.

முள் - முறு - முற்று - முற்றுகை = மதிலைச்சூழ்தல்.

முள் - (மள்) - வள் - வளவு = வீட்டின் சுற்றுப்புறம்.

வள் - வளாகம் = சுற்றியுள்ள நிலப்பகுதி.

வள் - வளை - வளைசல் = வளவு.

வள் - வட்டை = சக்கரத்தின் சூட்டு.

வள் - வட்டு - வட்டம் = ஊர்கோள்.

முல் - (மல்) - வல் - வல. வலத்தல் = வளைதல், சூழ்தல்.

வல - வலை = சூழ்ந்து ஒன்றைப் பிடிக்கும் கயிற்றுக் கருவி.

வள் - வாள் - வார் - வாரி = நிலத்தைச் சூழ்ந்த கடல்.

வார் - வாரணம் = கடல். வார்தல் = வளைதல், சூழ்தல்.

வாரணம் - வாரணன் = கடல் தெய்வம்.

வாரணன் - வருணன்.

“வருணன் மேய பெருமண லுலகமும்”                          (தொல். அகத். 5)

iii. சுருள்தல்

சுருள்தலாவது, ஒரு நீண்ட துவள்பொருள் ஒரு வளையமாகவோ பல வளையங்களாகவோ அமைதல். அது போன்ற தோற்றமும் இயக்கமும் அதன்பாற்படும்.

குள் - குழல். குழலுதல் = சுருளுதல்.

“கடைகுழன்ற கருங்குழல்கள”                                      (சீவக. 164)

குள் - (குள்) - குருள் = சுருள்.

(குரு) - குறண்டு. குறண்டுதல் = சுருள்தல்.

குள் - கொள் - கோள் - கோடு = சங்கு. கோடுதல் = வளைதல், சுழிதல்.

சுள் - (சுரு) - சுருள் = சுருண்ட பொருள்.

சுருள் - சுருளி.