புள் - புரி - புரிசை = நகரைச் சுற்றியுள்ள மதில். புரி - பரி. பரித்தல் = சூழ்தல். “குருதி பரிப்ப” (அகம். 31) பரிவேடம் = ஊர்கோள். முள் - முறு - முற்று - முற்றுகை = மதிலைச்சூழ்தல். முள் - (மள்) - வள் - வளவு = வீட்டின் சுற்றுப்புறம். வள் - வளாகம் = சுற்றியுள்ள நிலப்பகுதி. வள் - வளை - வளைசல் = வளவு. வள் - வட்டை = சக்கரத்தின் சூட்டு. வள் - வட்டு - வட்டம் = ஊர்கோள். முல் - (மல்) - வல் - வல. வலத்தல் = வளைதல், சூழ்தல். வல - வலை = சூழ்ந்து ஒன்றைப் பிடிக்கும் கயிற்றுக் கருவி. வள் - வாள் - வார் - வாரி = நிலத்தைச் சூழ்ந்த கடல். வார் - வாரணம் = கடல். வார்தல் = வளைதல், சூழ்தல். வாரணம் - வாரணன் = கடல் தெய்வம். வாரணன் - வருணன். “வருணன் மேய பெருமண லுலகமும்” (தொல். அகத். 5) iii. சுருள்தல் சுருள்தலாவது, ஒரு நீண்ட துவள்பொருள் ஒரு வளையமாகவோ பல வளையங்களாகவோ அமைதல். அது போன்ற தோற்றமும் இயக்கமும் அதன்பாற்படும். குள் - குழல். குழலுதல் = சுருளுதல். “கடைகுழன்ற கருங்குழல்கள” (சீவக. 164) குள் - (குள்) - குருள் = சுருள். (குரு) - குறண்டு. குறண்டுதல் = சுருள்தல். குள் - கொள் - கோள் - கோடு = சங்கு. கோடுதல் = வளைதல், சுழிதல். சுள் - (சுரு) - சுருள் = சுருண்ட பொருள். சுருள் - சுருளி. |