பெற்றிருந்த ஊர் வீரபாண்டியம் என இன்று வழங்குகின்றது.31 மதுரை
நாட்டுப் பெரிய குளம்
வட்டத்தில் மற்றொரு வீரபாண்டியன் நல்லூர் உண்டு.
புல்லை நல்லூர் என்னும் பழம் பெயர்
வாய்ந்த அவ்வூர் வீரபாண்டியன்
பெயரைப் பிற்காலத்தில் பெற்றதென்பது கல்வெட்டுகளால்
விளங்கும்.32 அவ்
வீரபாண்டிய நல்லூர் வீரபாண்டி எனக் குறுகியுள்ளது.
மூன்று பாண்டியர்
பாண்டி நாட்டைச் சோழர் ஆட்சியினின்றும் விடுவிப்பதற்குப்
பன்முறை முயன்றனர் பாண்டியர்.
இராஜாதி ராஜ சோழன் காலத்தில் மூன்று
பாண்டியர் ஒன்று சேர்ந்து உள்நாட்டுக்
கலகம்
விளைத்தார்கள். சோழன்
படையெடுத்தான். பாண்டியர் மூவரும்
எதிர்த்தனர். அவர்களில்
மானாபரணனும், வீர கேரளனும் போர்க்களத்தில்
இறந்தார்கள். அன்னார்
பெயர் கொண்டு நிலவும்
ஊர்கள் நெல்லை நாட்டிற்
சில உண்டு. அம்பா
சமுத்திர வட்டத்திலுள்ள மானாபரண நல்லூரும்,
தென்காசி வட்டத்திலுள்ள
வீர கேரளன் புத்தூரும் அவரது சுதந்தர
ஆர்வத்திற்குச் சான்றாக
நிற்கின்றன.
சுந்தர பாண்டியன்
பாண்டி நாட்டிலுள்ள ஊர்களில் ஒன்று மாறனேரி.33 முற்காலத்தில்
அது மாறமங்கலம் என்னும் பெயரால் வழங்கிற் றென்பது சாசனத்தால்
விளங்குகின்றது. அவ்வூர் சுந்தர பாண்டிய
நல்லூர்
என்ற மறு பெயர்
பெற்றிருந்த தென்பதும், சுந்தர பாண்டீச்சரம்
என்னும்
|